சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பாலைக்கிழத்தி | பாலைக்கு உரியவளான கொற்றவை . |
| பாலைத்திறம் | காண்க : பாலையாழ்த்திறம் . |
| பாலைநிலப்பூ | கள்ளி ; பாலை ; பூளை . |
| பாலைநிலம் | முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் . |
| பாலைநிலவிலங்கு | செந்நாய் . |
| பாலைப்பண் | பெரும்பண்வகை . |
| பாலைமணி | அக்குமணி . |
| பாலையாழ் | பெரும்பண்வகை . |
| பாலையாழ்த்திறம் | பாலைப்பண்ணைச் சார்ந்த சிறு பண்கள் . |
| பாலைவனம் | பரந்த மணல்வெளி . |
| பாலொடுவை | காண்க : கொடிப்பாலை . |
| பாவகம் | அக்கினி ; சேங்கொட்டை ; கொலை ; கருத்து ; தியானம் ; இயல்பு ; உருவம் ; காதலை வெளியிடும் குறிப்பு ; பாசாங்கு . |
| பாவகன் | தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் . |
| பாவகாரி | பாவம் செய்வோன் . |
| பாவகி | தீயில் பிறந்தோனாகிய முருகன் . |
| பாவச்சுமை | நுகர்ந்து கழித்தற்குரிய பாவத்திரள் . |
| பாவசுத்தி | பாவம் நீங்குகை ; மனத்தூய்மை . |
| பாவசேடம் | நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை . |
| பாவட்டை | செடிவகை ; சிறு மரவகை ; ஆடாதோடை . |
| பாவடி | அங்கவடி ; பாட்டிலடங்கிய அடி . |
| பாவண்ணம் | நூற்பாச் சந்தம் . |
| பாவநாசம் | பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் . |
| பாவநிவாரணம் | பாவம் நீக்குதல் . |
| பாவபாணம் | மனோபாவங்களாகிய நல்வினை தீவினைகள் . |
| பாவம் | தீவினைப் பயன் ; தீச்செயல் ; நரகம் ; இரக்கக்குறிப்பு ; உளதாந்தன்மை ; முறைமை ; தியானம் ; எண்ணம் ; அபிநயம் ; விளையாட்டு ; நிலைதடுமாற்றம் ; ஆத்துமாவிடம் உண்டாகும் பரிணாம விசேடம் ; இயக்கம் . |
| பாவம்பழி | கொடுந்தீச்செயல் . |
| பாவமன்னிப்பு | பாவத்தைப் பொறுக்கை . |
| பாவமூர்த்தி | வேடன் . |
| பாவர் | பாவிகள் . |
| பாவரசம் | கருத்துநயம் ; அபிநயச்சுவை . |
| பாவல் | மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி . |
| பாவலர் | கவிஞர் ; புலவர் . |
| பாவறை | கூடாரம் . |
| பாவனத்துவனி | சங்கு . |
| பாவனம் | துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை . |
| பாவனன் | துப்புரவாளன் ; அனுமன் ; வீமன் . |
| பாவனாதீதம் | எண்ணுதற்கு அரியது . |
| பாவனி | கங்கை ; பசு ; துளசி ; மேளகர்த்தாக்களுள் ஒன்று . |
| பாவனை | நினைப்பு ; தெளிகை ; ஐம்புலனுள் ஒன்று ; தியானம் ; தியானிக்கப்படுவது ; ஒப்பு ; அடையாளம் ; போலி ; நடத்தை ; நடிப்பு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| பாவனைகாட்டுதல் | ஒன்றன் செயல்போலச் செய்தல் ; அபிநயித்தல் ; வேடங்கொள்ளுதல் ; வரைந்துகாட்டுதல் . |
| பாவாடம் | நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் . |
| பாவாடை | பெண்களின் உடைவகை ; பெரியோர் முதலியவர் நடந்துசெல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை ; கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையிற் படைக்கும் அன்னம் ; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை ; மேசைவிரிப்பு ; வேலைநாள் . |
| பாவாணர் | பாவலர் . |
| பாவாத்துமா | தீச்செயல் புரிவோன் . |
| பாவாபாவம் | உண்மையும் இன்மையும் . |
| பாவார்த்தம் | கருத்துரை ; சொற்பொருள் . |
| பாவாற்றி | நெய்வார் குச்சு . |
| பாவாற்றுதல் | நெசவுப்பாவைத் தறிக்கு ஆயத்தம் செய்தல் . |
| பாவி | தீமையாளன் ; சாது ; வரக்கூடியது ; பேதை . |
| பாவி | (வி) மதி ; பாவனைசெய் . |
| பாவிகம் | தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு . |
| பாவிட்டன் | கொடும்பாவஞ் செய்தவன் . |
| பாவித்தல் | எண்ணுதல் ; தியானித்தல் ; பாவனைசெய்தல் ; பொய்யாக நடித்தல் ; நுகர்தல் . |
| பாவியம் | காப்பியம் ; பாவிக்கத்தக்கது ; தகுதி . |
| பாவியர் | குறிப்புடையவர் . |
| பாவிரிமண்டபம் | சங்கமண்டபம் . |
| பாவினம் | தாழிசை ; துறை , விருத்தம் என்னும் முப்பகுதியான பாவின்வகை . |
| பாவு | நெசவுப்பா ; இரண்டுபாக வளவு ; இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை . |
| பாவுகல் | தளம் பரப்புங் கல் . |
| பாவுதல் | படர்தல் ; பரவுதல் ; ஊன்றுதல் ; தளவரிசையிடுதல் ; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல் ; நாற்று நடுதல் ; தாண்டுதல் ; பரப்புதல் . |
| பாவுபலகை | மேல்தளமாகப் பரப்பும் பலகை . |
| பாவை | பொம்மைபோன்ற அழகிய பெண் ; பதுமை ; அழகிய உருவம் ; கருவிழி ; பெண் ; குரவமலர் ; காண்க : பாவைக்கூத்து ; நோன்பு வகை ; திருவெம்பாவை ; திருப்பாவை ; இஞ்சிக்கிழங்கு ; மதில் . |
| பாவைக்கூத்து | அவுணர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவுகொண்டு ஆடிய ஆடல் ; பொம்மலாட்டம் . |
| பாவைத்தீபம் | கோயிலில் வழங்கும் தீப ஆராதனைக் கருவிவகை . |
| பாவைப்பாட்டு | திருப்பாவை திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள்வகை . |
| பாவையாடல் | காண்க : பாவைக்கூத்து ; பெண்பாற் பிள்ளைத்தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை . |
| பாவையிஞ்சி | இஞ்சிக்கிழங்கு . |
| பாவைவிளக்கு | பெண் கையில் தாங்கிநிற்பது போல அமைக்கும் விளக்கு , பதுமைவிளக்கு . |
| பாவோடல் | நெசவில் இழையோடுந் தடி . |
| பாவோடுதல் | நெய்வார் தொழிலினொன்று , நூலை நெசவுப் பாவாக்குதல் ; சலித்துக் கொண்டே இருத்தல் . |
| பாழ் | அழிவு ; இழப்பு ; கெடுதி ; இழிவு ; அந்தக் கேடு ; வீண் ; வெறுமை ; இன்மை ; ஒன்றுமில்லாத இடம் ; தரிசுநிலம் ; குற்றம் ; வானம் ; மூலப்பகுதி ; புருடன் . |
| பாழ்க்கடித்தல் | அழித்தல் . |
| பாழ்க்கிறைத்தல் | காண்க : பாழுக்கிறைத்தல் . |
| பாழ்க்கோட்டம் | சுடுகாடு . |
| பாழ்ங்கிணறு | தூர்ந்து அல்லது இடிந்து பாழான கிணறு . |
|
|
|