சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புரவித்தேவர் | குதிரைமுகமுள்ள தேவரான அசுவினிதேவர்கள் . |
| புரவிவட்டம் | குதிரை செலுத்தும் வீதியாகிய வையாளிவீதி . |
| புரவிவேள்வி | காண்க : அசுவமேதம் . |
| புரவு | பாதுகாப்பு ; அரசு ; கொடை ; ஆட்சியிடம் ; அரசிறை ; இறையிலி நிலம் ; ஆற்றுநீர் பாயும் வயல் ; செழுமை . |
| புரவுவரி | காண்க : புரவரியார் . |
| புரவுவரித்திணைக்களம் | அரசிறைக் கணக்கர் கூடும் உத்தியோகசாலை . |
| புரளி | பொய் ; வஞ்சனை ; குறும்பு ; சண்டை ; கலகம் ; முருட்டுத்தனம் . |
| புரளிக்காரன் | பொய்யன் ; புரட்டுச்செய்வோன் ; சண்டையிடுபவன் ; ஆணையை மீறிக் கலகஞ்செய்பவன் . |
| புரளிபண்ணுதல் | குறும்புசெய்தல் ; எள்ளிநகையாடல் . |
| புரளுதல் | உருளுதல் ; கழிதல் ; அலைமறிதல் ; நிரம்பிவழிதல் ; அழுக்காதல் ; நீரிற்கலத்தல் ;சொற்பிறழுதல் ; மிகுதல் ; மாறிமாறிவருதல் ; சாதல் . |
| புராகிருதபாவம் | முன்செய்த தீவினை . |
| புராகிருதம் | முன்செய்தது . |
| புராணகன் | காண்க : புராணிகன் ; படிப்போன் . |
| புராணபுருடன் | திருமால் . |
| புராணம் | பழைமை ; தொன்மம் ; பழங்கதை ; வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தும் நூல் ; கோயிலிற் புராணம் படிப்பதற்கு விடப்பட்ட மானியம் . |
| புராணன் | பழமையான கடவுள் . |
| புராணிகன் | புராணப் பிரசங்கம் செய்வோன் ; புராணம் செய்த ஆசிரியன் . |
| புராணை | காண்க : புராதனி . |
| புராதனகாண்டம் | விவிலிய நூலின் பழைய ஏற்பாடு . |
| புராதனம் | பழமையானது ; பழமை ; கிழத்தனம் ; பழஞ்சோறு . |
| புராதனர் | முன்னோர் . |
| புராதனி | பழமையான பார்வதி . |
| புராந்தகன் | காண்க : புரமெரித்தோன் . |
| புராந்தகி | சிவசத்தி . |
| புராந்திமகாண்டம் | காண்க : புராதனகாண்டம் . |
| புராந்திமம் | பழைமை . |
| புராரி | காண்க : புரமெரித்தோன் . |
| புராவிருத்தம் | இதிகாசம் . |
| புரி | செய்கை ; கயிறு ; முறுக்கு ; சுருள் ; சுரி ; சங்கு ; விருப்பம் ; யாழ்நரம்பு ; மாலை ; கட்டு ; தலைநகர் ; மருதநிலத்தூர் ; உடல் . |
| புரி | (வி) புரிஎன் ஏவல் ; செய் ; விரும்பு . |
| புரிக்கூடு | நெற்சேர் . |
| புரிகுழல் | கடைகுழன்று சுருண்ட கூந்தல் . |
| புரிகை | அங்கக்கிரியைவகை . |
| புரிசடை | திரண்டு சுருண்ட சடை . |
| புரிசம் | அருமை ; நான்குமுழ நீளம் . |
| புரிசாலம் | கெஞ்சுகை ; விண்ணப்பம் . |
| புரிசை | மதில் . |
| புரித்தல் | விரும்பச்செய்தல் ; நிரைத்தல் ; பதித்தல் ; பொருள் விளங்குதல் ; விளங்குதல் . |
| புரிதல் | விரும்புதல் ; தியானித்தல் ; செய்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; கொடுத்தல் ; நுகர்தல் ; உற்றுப்பார்த்தல் ; விசாரணைசெய்தல் ; சொல்லுதல் ; நடத்துதல் ; மேற்கொள்ளுதல் ; முறுக்குக்கொள்ளுதல் ; திரும்புதல் ; மிகுதல் ; அசைதல் ; விளங்குதல் ; பொருள் விளங்குதல் . |
| புரிதிரித்தல் | கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ; கெடுக்க வழிதேடுதல் . |
| புரிந்தோர் | நண்பர் . |
| புரிநாண் | திரித்துச் செய்யப்பெற்ற கயிறு . |
| புரிநூல் | காண்க : புரிமுந்நூல் . |
| புரிப்பித்தல் | வளைந்து திரும்பச் செய்தல் . |
| புரிமணை | பாண்டம் வைப்பதற்கு வைக்கோல் , நார் முதலியவற்றால் அமைத்த பீடம் . |
| புரிமுகம் | கோபுரம் ; சங்கு ; நத்தை . |
| புரிமுந்நூல் | பூணூல் . |
| புரிமுறுக்கல் | கோள்மூட்டிவிடுதல் . |
| புரிமுறுக்கு | காண்க : புரிமுறுக்கல் ; மலராத தாமரைப் பூ . |
| புரிமுறுக்குதல் | கோட்சொல்லுதல் . |
| புரியட்டகம் | நுண்ணுடல் . |
| புரியட்டகாயம் | நுண்ணுடல் . |
| புரியணை | காண்க : புரிமணை . |
| புரியம் | கூத்துவகை . |
| புரியிட்டீர்த்தல் | பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் . |
| புரியைக்கட்டியிழுத்தல் | பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் . |
| புரிவலித்தல் | கட்டுதல் . |
| புரிவளை | முறுக்குவளையல் . |
| புரிவிடுதல் | கயிறுதிரிக்கப் புரியை முறுக்குதல் . |
| புரிவில்புகழ்ச்சியணி | காண்க : புகழாப்புகழ்ச்சி . |
| புரிவின்மைநயம் | புத்த சமயத்து நயம் நான்கனுள் ஒன்று . |
| புரிவு | அன்பு ; விருப்பம் ; தொழில் ; தவறு ; தப்பி நீங்குகை ; வேறுபடுகை ; தெளிவு . |
| புரீடம் | மலம் ; அழுக்கு . |
| புரு | ஒரு மரவகை ; மிகுதி ; பருமை ; வீடுபேறு ; குழந்தை ; ஓரரசன் ; விருடப தீர்த்தங்கரர் ; ஓர் அசுரன் . |
| புருகூதன் | வேள்விகளில் மிகுதியாக அழைக்கப்படும் இந்திரன் . |
| புருடகாலம் | முப்பத்தைந்து ஆண்டுக்காலம் . |
| புருடதத்துவம் | சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்றாகியதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம் . |
| புருடநட்சத்திரம் | இரேவதிநாள் . |
| புருடநாள் | இரேவதிநாள் . |
| புருடம் | ஐந்துவகைப் பிரமங்களுள் ஒன்றான மந்திரம் ; காண்க : தற்புருடம் ; நான்குமுழ நீளம் ; புன்னைமரம் . |
| புருடமேதம் | மனிதவேள்வி . |
| புருடமோகினி | பார்வதி . |
| புருடராகம் | ஒன்பதுவகை மணிகளுள் ஒன்று . |
| புருடவாகனன் | காண்க : நரவாகனன் . |
| புருடன் | ஆண்மகன் ; கணவன் ; மனிதன் ; சிற்றுயிர் , சீவான்மா ; பேருயிர் ; பரமான்மா ; காண்க : புருடதத்துவம் . |
|
|
|