சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புல்லார்தல் | தோல்வியுறுதல் . |
| புல்லாள் | காண்க : புல்லுரு ; ஆறலைகள்வன் . |
| புல்லி | புறவிதழ் ; பூவிதழ் . |
| புல்லிகை | குதிரைகளுக்கு அணியும் கன்ன சாமரை . |
| புல்லிங்கம் | வடசொல்லின் ஆண்பால் . |
| புல்லிதழ் | காண்க : புல்லி . |
| புல்லிது | இழிவானது . |
| புல்லியார் | இழிந்தவர் . |
| புல்லிலைவைப்பு | இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் . |
| புல்லினத்தாயன் | ஆட்டிடையன் . |
| புல்லினத்தான் | ஆட்டிடையன் . |
| புல்லினம் | ஆட்டினம் . |
| புல்ல¦ரம் | குறைந்த ஈரம் . |
| புல்லு | புல் ; கிட்டிப்புள் ; கொடியின் தாங்கு கட்டை . |
| புல்லுக்கட்டை | அறுத்துவிட்ட புல்லின் அடிப்பாகம் . |
| புல்லுக்கற்றை | புல்லுத்திரள் . |
| புல்லுத்தரை | புல் படர்ந்த நிலம் . |
| புல்லுதல் | தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; வரவேற்றல் ; ஒத்திருத்தல் ; ஒட்டுதல் ; நட்புச்செய்தல் . |
| புல்லுநர் | நண்பர் . |
| புல்லுமேய்தல் | புல்லுத்தின்னுதல் ; புல்லாற் கூரைபோடுதல் . |
| புல்லுயிர் | குழந்தை ; சிற்றுயிர் . |
| புல்லுரு | பயிரையழிக்கும் பறவை விலங்குகளை ஓட்டுதற்காக வயலில் புல்லால் அமைக்கப்படும் உருவம் . |
| புல்லுருவி | மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூண்டுவகை . |
| புல்லுறுத்தல் | நிகழ்த்துதல் . |
| புல்லூரி | காண்க : புல்லுருவி . |
| புல்லூறு | ஒரு பறவைவகை . |
| புல்லெழுதல் | புல்லுண்டாதல் ; ஆள்வழக்கறுதல் . |
| புல்லெனல் | பொலிவழிதற்குறிப்பு ; இழிவு பாட்டுக் குறிப்பு . |
| புல்லை | மங்கலான மஞ்சள்நிறம் . |
| புல்வாய் | கலைமான் . |
| புல்வீடு | புல்வேய்ந்த கூரையுள்ள குடிசை . |
| புல்வெட்டிப்பல் | மாட்டின் முன்வாய்ப் பல் . |
| புல்வேய்குரம்பை | காண்க : புல்வீடு . |
| புல | புலால் ; புலால்நாற்றம் . |
| புலங்கொள்ளுதல் | விளங்குதல் ; தெளிவடைதல் . |
| புலச்சாய்வு | வயற்புறம் . |
| புலச்சி | அறிவு நிறைந்தவன் . |
| புலச்செய்கை | உழவு . |
| புலத்தகை | ஊடல் . |
| புலத்தல் | மனம் வேறுபடுதல் ; துன்புறுதல் ; வெறுத்தல் ; அறிவுறுத்துதல் . |
| புலத்தார் | குடிகள் . |
| புலத்தி | வண்ணாத்தி . |
| புலத்தோர் | அறிவுடைச் சான்றோர் ; ஞானியர் . |
| புலநெறிவழக்கம் | புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு . |
| புலப்படுத்துதல் | தெரிவித்தல் . |
| புலப்படுதல் | தெரிதல் ; வெளிப்படுதல் . |
| புலப்பம் | பிதற்று ; அலப்பு ; அழுகை ; நோய் மிகுதியால் வாய்குழறுகை ; நன்றாய்த் தெரிகை . |
| புலப்பாடு | நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை . |
| புலபுலெனல் | விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு . |
| புலம் | வயல் ; இடம் ; திக்கு ; மேட்டுநிலம் ; பொறி ; பொறியுணர்வு ; அறிவு ; கூர்மதி ; துப்பு ; நூல் ; வேதம் . |
| புலம்பல் | ஒளி ; தனிமை கூறுகை ; அழுதல் ; பிதற்றுதல் ; அழுகைப்பாட்டு ; அலப்புகை . |
| புலம்பன் | நெய்தல்நிலத் தலைவன் ; ஆன்மா . |
| புலம்பிடித்தல் | துப்புக் கண்டுபிடித்தல் . |
| புலம்பு | ஒலி ; பிதற்றல்மொழி ; அழுகையொலி ; தனிமை ; பிரிவு ; மனக்கலக்கம் ; வருத்தம் ; வெறுப்பு ; அச்சம் ; குற்றம் . |
| புலம்புதல் | அழுதல் ; ஒலித்தல் ; பிதற்றுதல் ; தனித்தல் ; வருந்துதல் ; வாடுதல் ; வெறுத்தல் ; அடிக்கடி கூறுதல் . |
| புலம்புநீர் | கண்ணீர் . |
| புலம்புமுத்து | அழுகைக் கண்ணீர் . |
| புலம்புவித்தல் | அவசமாக்குதல் . |
| புலம்புள் | அழுகை . |
| புலம்பெயர்மாக்கள் | அயல்நாட்டினர் ; கடலோடிகள் . |
| புலம்விசாரித்தல் | உளவறிதல் . |
| புலம்வைத்தல் | உளவு எதிர்பார்த்தல் . |
| புலமகள் | கலைமகள் . |
| புலமகன் | புலமையுள்ளவன் . |
| புலமங்கை | நிலமகள் . |
| புலமறிதல் | காண்க : புலனறிதல் . |
| புலமாக்குதல் | தெரிவித்தல் ; வெளியாக்குதல் . |
| புலமினுக்கி | துடைப்பம் . |
| புலமை | மெய்யறிவு ; செய்யுளியற்றும் ஆற்றல் . |
| புலமைபாடுதல் | பாப்புனைதல் . |
| புலமையோர் | கவி , கமகன் , வாதி , வாக்கி என்னும் நால்வகைக் கல்விவல்லோர் ; கற்றோர் . |
| புலர் | உலர்கை . |
| புலர்காலை | விடியல் . |
| புலர்ச்சி | வாடுகை ; உலருகை ; விடிகை . |
| புலர்த்துதல் | உலர்த்துதல் ; வாட்டுதல் ; பூசுதல் . |
|
|
|