சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆசுவிகன் | காண்க : ஆசீவகன் . |
| ஆசுவிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
| ஆசுவினம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
| ஆசுவீசம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
| ஆசூ | நரக வாதை : அமஞ்சிவேலை . |
| ஆசூசம் | தீட்டு . |
| ஆசூரம் | காண்க : வெள்வெண்காயம் . |
| ஆசெதுகை | ய் , ர் , ல் , ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது |
| ஆசெறூண் | ஆசெல்தூண் , ஆதீண்டுகுற்றி . |
| ஆசேகம் | நனைக்கை . |
| ஆசேதம் | அரசன் ஆணையை மேற்கொண்டு தடைசெய்கை . |
| ஆசை | வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம் ; விருப்பம் ; பொருளாசை ; காமவிச்சை ; அன்பு ; பேற்றில் நம்பிக்கை ; பொன் ; திசை ; பொன்னூமத்தை . |
| ஆசைக்காரணர் | திக்குப் பாலகர் . |
| ஆசைகாட்டுதல் | தன்வசமாகும் பொருட்டு இச்சை உண்டாக்குதல் . |
| ஆசைநாயகி | அன்புக்குரியாள் ; வைப்பாட்டி . |
| ஆசைப்படுதல் | விரும்புதல் . |
| ஆசைப்பதம் | வசீகரப் பேச்சு . |
| ஆசைப்பாடு | விருப்பம் . |
| ஆசைப்பேச்சு | இச்சகம் ; வசமாக்கும் பேச்சு . |
| ஆசைபிடித்தல் | இச்சை மிகுதல் . |
| ஆசைபூட்டுதல் | ஆசையில் சிக்கச்செய்தல் . |
| ஆசைமருந்து | தன்வசமாகக் கூட்டும் மருந்து . |
| ஆசைவார்த்தை | நம்பிக்கை உண்டாகச் சொல்லும் சொல் . |
| ஆசோதை | இளைப்பாறுகை ; வேலை முடிந்த பின் கொள்ளும் ஒய்வு . |
| ஆசௌசம் | தீட்டு . |
| ஆஞ்சனேயன் | அஞ்சனாதேவியின் மகனான அனுமான் . |
| ஆஞ்சான் | மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு ; பாரந் தூக்கும் கயிறு ; இளமரத்தின் தண்டு ; தண்டனைக்குரிய கோதண்டம் . |
| ஆஞ்சான்கயிறு | கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறு . |
| ஆஞ்சான்பற்றி | மரக்கலக் கூம்பு . |
| ஆஞ்சி | அச்சம் ; அலைவு ; கூத்து ; சோம்பு ; ஏலம் . |
| ஆஞ்சிக்காஞ்சி | போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை ; போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை . |
| ஆஞ்சித்தாழை | மஞ்சள் நிறமுள்ள தாழைவகை . |
| ஆஞ்சிரணம் | காட்டுத்துளசி . |
| ஆஞ்சில் | சங்கஞ்செடி . |
| ஆஞ்சிறிகம் | சங்கஞ்செடி . |
| ஆஞ்ஞாசக்கரம் | அரசாணையாகிய சக்கரம் . |
| ஆஞ்ஞாபனம் | கட்டளையிடுதல் . |
| ஆஞ்ஞாபித்தல் | கட்டளையிடுதல் . |
| ஆஞ்ஞை | கட்டளை ; ஆறாதாரங்களுள் ஒன்று . |
| ஆஞா | தந்தை . |
| ஆஞான் | தந்தை . |
| ஆட்கடியன் | பாம்புவகை ; முதலை . |
| ஆட்காசு | ஆள் உருவம் பொறித்த பழங்காசு வகை . |
| ஆட்காட்டி | சுட்டுவிரல் ; பறவைவகை ; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை . |
| ஆட்கால் | சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை . |
| ஆட்கூலி | ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி . |
| ஆட்கொல்லி | கொலைஞன் ; பணம் ; தில்லை மரம் . |
| ஆசீயம் | கருஞ்சீரகம் . |
| ஆசீர்வசனம் | வாழ்த்துரை . |
| ஆசீர்வதித்தல் | வாழ்த்துதல் . |
| ஆசீர்வாதம் | வாழ்த்து . |
| ஆசீல் | மதிப்பு . |
| ஆசீல்கட்டுதல் | மதிப்பிடுதல் . |
| ஆசீவகப்பள்ளி | ஆசீவகத் தவத்தோர் உறைவிடம் . |
| ஆசீவகன் | சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி . |
| ஆசு | குற்றம் ; ஆணவமலம் ; புல்லிது ; நுட்பம் ; ஐயம் ; துன்பம் ; பற்றுக்கோடு ; வாளின் கைப்பிடி ; கவசம் ; கைக்கவசம் ; பற்றாசு ; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை ; எதுகை இடையில் வரும் ய் , ர் , ல் , ழ் என்னும் ஒற்றுகள் ; நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று ; இலக்கு ; விரைவு ; ஆசுகவி ; இடைக்கார்நெல்வகை ; அச்சு . |
| ஆசுக்காயம் | நரிவெங்காயம் . |
| ஆசுகம் | காற்று ; அம்பு ; பறவை . |
| ஆசுகவி | கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ; ஆசுகவி பாடும் புலவன் . |
| ஆசுகன் | காற்று ; சூரியன் . |
| ஆசுகி | பறவை . |
| ஆசுசுக்கணி | நெருப்பு . |
| ஆசுணம் | காண்க : அசோகம் ; அரசு . |
| ஆசுபத்திராமரம் | மரவகை . |
| ஆசுபொதுமக்கள் | சமணருள் ஒரு சாரார் . |
| ஆசுமணை | நெய்தற் கருவிகளுள் ஒன்று . |
| ஆசுரம் | அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் . |
| ஆசுரவைத்தியம் | அறுவை மருத்துவம் . |
| ஆசுராப்பண்டிகை | மொகரம் பண்டிகை . |
| ஆசுரி | அசுரப்பெண் . |
| ஆசுவடிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
| ஆசுவம் | குதிரைக்கூட்டம் ; குதிரை இழுக்குந்தேர் ; குதிரை சம்பந்தமுடையது ; ஆசீவகர் உணவு . |
| ஆசுவயம் | விரைவு ; வேதநுட்பம் . |
| ஆசுவயுசி | ஒரு வேள்வி ; ஐப்பசி மாத முழுநிலா . |
| ஆசுவாசம் | இளைப்பாறுகை . |
|
|
|