சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பூட்டுநோவு | உடற்சந்துகளில் ஏற்படும் வலி . |
| பூட்டுப்போடுதல் | திறவுகோலாற் பூட்டிடுதல் ; பேசவொட்டாது செய்தல் . |
| பூட்டுவாய் | திறவுகோல் புகும் துளை ; நெருக்கடியான சமயம் . |
| பூட்டுவிடுதல் | உடற்பொருத்துவாய் விலகிப் போதல் . |
| பூட்டுவிலகுதல் | உடற்பொருத்துவாய் விலகிப் போதல் . |
| பூட்டுவிற்பொருள்கோள் | செய்யுள் முதலினும் இறுதியினும் நிற்குஞ் சொற்கள் தம்முள் இயையப் பொருள்கொள்ளும் முறை . |
| பூட்டை | ஏற்றமரம் ; இராட்டினத்தின் சக்கரம் ; இறைகூடை ; நீர்இறைக்குங் கருவிவகை ; செக்கு ; பூட்டாங்கயிறு ; சோளக்கதிர் . |
| பூட்டைப்பொறி | நீர் இறைக்கும் கருவிவகை . |
| பூட்டைவாங்குதல் | சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல் . |
| பூடணம் | அணிகலன் , நகை . |
| பூடு | காண்க : பூண்டு . |
| பூண் | அணி ; உலக்கை முதலியவற்றிற்கு இடும் பூண் ; கவசம் ; யானைக்கோட்டின் கிம்புரி . |
| பூண்கட்டுதல் | உலக்கை முதலியவற்றிற்குப் பூண்பிடித்தல் ; பலப்படுத்துதல் ; போற்றுதல் . |
| பூண்கடைப்புணர்வு | அணிகலக்கொக்கி . |
| பூண்டறுத்தல் | அடியோடழித்தல் . |
| பூண்டான் | கணவன் . |
| பூண்டி | ஊர் ; தோட்டம் ; திடர்பட்ட கடற்பகுதி . |
| பூண்டு | சிறு செடி ; உள்ளிப்பூண்டு ; சிற்றடையாளம் . |
| பூணாரம் | அணிகலன் , |
| பூணாரவெலும்பு | மணிக்கட்டினெலும்பு ; காறை எலும்பு . |
| பூணி | எருது ; ஆனினம் ; இடபராசி ; நீர்ப் பறவைவகை . |
| பூணித்தல் | தோற்றுவித்தல் ; குறிப்பிடுதல் ; தீர்மானம்செய்தல் . |
| பூணிப்பு | நோன்புநோற்றல் ; தீர்மானம் . |
| பூணுதல் | அணிதல் ; மேற்கொள்ளுதல் ; விலங்கு முதலியன தரித்தல் ; சூழ்ந்துகொள்ளுதல் ; உடைத்தாதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; நுகத்திற் கட்டப்படுதல் ; நெருங்கியிறுகுதல் . |
| பூணுநூல் | பார்ப்பனர் , கம்மாளர் அணியும் நூல் ; இருபிறப்பாளர் தரிக்கும் முப்புரிநூல் . |
| பூணூல் | பார்ப்பனர் , கம்மாளர் அணியும் நூல் ; இருபிறப்பாளர் தரிக்கும் முப்புரிநூல் . |
| பூணை | முல்லைநிலம் . |
| பூத்தருபுணர்ச்சி | தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனொடு தலைவி கூடும் கூட்டம் . |
| பூத்தல் | மலர்தல் ; தோன்றுதல் ; உண்டாதல் ; பொலிவுபெறுதல் ; பூப்படைதல் ; கண்ணொளி மங்குதல் ; பூஞ்சணம் பிடித்தல் ; பயனின்றிப் போதல் ; தோற்றுவித்தல் ; படைத்தல் ; பெற்றெடுத்தல் . |
| பூத்தானம் | அருமை பாராட்டுதல் ; புதுமை . |
| பூத்திரம் | மலை . |
| பூத்துப்பூத்தெனல் | ஓடுதல் முதலியவற்றால் உண்டாகும் மூச்சிழைத்தற் குறிப்பு ; உடல் வீக்கக் குறிப்பு . |
| பூத்துப்போதல் | நெருப்பில் நீறுபடர்தல் ; கண் பார்வை மங்குதல் . |
| பூத்தொடுத்தல் | பூமாலை கட்டுதல் ; பண்டங்களை நெருக்கமின்றி வைத்துப் பெரிதாகக் கட்டுதல் ; கதைகட்டுதல் . |
| பூதக்கண்ணாடி | சிறியதைப் பெரிதாகக் காட்டுங் கண்ணாடிவகை . |
| பூதகணம் | பூதங்களின் கூட்டம் . |
| பூதகாலம் | காண்க : இறந்தகாலம் . |
| பூதகிருதாயி | இந்திராணி . |
| பூதகிருது | இந்திரன் . |
| பூதசஞ்சாரம் | உலகவாழ்வு . |
| பூதசதுக்கம் | காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல் காத்துவந்த நாற்சந்தி . |
| பூதசரீரம் | பருவுடல் . |
| பூதசாரசரீரம் | தேவன் உடல் . |
| பூதசாரம் | ஐம்பூத மூலம் . |
| பூதசாரவுடம்பு | துறக்க இன்பத்தை நுகர ஆன்மா எடுக்கும் தெய்வத்தன்மையுள்ள உடம்பு . |
| பூதசுத்தி | பாவம் நீங்குதற்குச் செய்யப்படும் ஒரு சடங்கு . |
| பூதத்துணர் | புனமுருங்கைமரம் . |
| பூததயவு | உயிர்களிடம் காட்டும் அன்பு . |
| பூததயை | உயிர்களிடம் காட்டும் அன்பு . |
| பூததாரன் | சிவபிரான் . |
| பூததானியம் | எள் . |
| பூதநாசினி | பெருங்காயம் . |
| பூதநாடி | பேய்பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித்துடிப்புவகை . |
| பூதநாதன் | பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் . |
| பூதநாயகன் | பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் . |
| பூதநாயகி | பார்வதி . |
| பூதப்படையோன் | பூதப்படைகளையுடைய சிவபிரான் . |
| பூதபதி | காண்க : பூதநாதன் . |
| பூதபரிணாமதேகம் | ஐம்பூதங்களின் வேறுபாட்டால் தோன்றிய உடம்பு . |
| பூதபரிணாமம் | ஐம்பூதங்களின் வேறுபாடு . |
| பூதம் | ஐவகைப் பூதம் ; ஐவகைப் பூதங்களின் அதிதேவதைகள் ; உடம்பு ; இறந்தவர்களின் பேயுருவம் ; பூதகணம் ; பரணிநாள் ; உயிர்வர்க்கம் ; பருத்தது ; காண்க : பூதவேள்வி ; சடாமாஞ்சில் ; அடியான் ; இருப்பு ; இறந்தகாலம் ; உள்ளான்பறவை ; கமுகு ; கூந்தற்பனை ; தூய்மை ; வாய்மை ; தருப்பை ; சங்கு ; ஆலமரம் ; பூரான் ; உயிரெழுத்து . |
| பூதமிவர்ந்தோன் | விநாயகக் கடவுள் . |
| பூதயாகம் | உயிர்கட்குப் பலியுணவு தருதல் . |
| பூதர் | பதினெண்கணத்துள் ஒருவரான மாந்தர் . |
| பூதரநாதன் | மலைகட்குத் தலைவனான இமவான் . |
| பூதரம் | மலை ; இமயம் ; மேரு . |
| பூதரன் | அரசன் ; திருமால் . |
| பூதரோதரம் | மலைக்குகை . |
| பூதலம் | பூமி . |
| பூதவக்குருக்கண் | ஆலம்விழுது . |
| பூதவம் | ஆலமரம் ; மருதமரம் . |
| பூதவாதம் | பூதங்களின் சேர்க்கையால் ஆன்மா உண்டானதென்று கூறும் வாதம் . |
| பூதவாதி | பூதவாத மதத்தவன் . |
| பூதவாளி | காண்க : பூதபதி . |
| பூதவிகாரம் | ஐம்பூதங்களின் மாறுபாடு . |
|
|
|