சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பூரணைகேள்வன் | ஐயனார் . |
பூரப்பாளை | தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு . |
பூரபதி | பச்சைக்கருப்பூரம் . |
பூரம் | கருப்பூரம் ; பச்சைக்கருப்பூரம் ; இரச கருப்பூரம் ; மருந்துவகை ; பூரநாள் ; ஒரு மணச்சடங்கு ; பூரான் ; தேள் ; பழம் ; பொன் ; நிறைவு ; வெள்ளம் ; வைப்புப் பாடாணவகை ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி . |
பூரவாகினி | கலைமகள் . |
பூரா | முழுதும் ; முழுதுமான ; நேர்த்தியான பழுப்புச்சருக்கரைவகை . |
பூராடம் | ஒரு நட்சத்திரம் . |
பூராயக்கதை | பழங்கதை . |
பூராயம் | ஆராய்ச்சி ; விசித்திரமானது ; குழந்தைகளின் கவனத்தைக் கவரும் பொருள் . |
பூரான் | ஊரும் உயிரிவகை ; குதிரையில் உள்ள தீச்சுழி ; பனைமுளை . |
பூரி | மிக்க ; மிகுதி ; சிறப்புக் காலங்களில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கும் தட்சிணை ; பொன் ; மொத்தம் ; ஒரு பேரெண் ; ஊதுகருவி வகை ; வில்லின் நாண் ; குற்றம் ; கலப்புநெல் ; பலகாரவகை ; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி ; காண்க : பூரியரிசி ; பப்பரப்புளி ; பூரிசகந்நாதம் என்னும் தலம் . |
பூரி | (வி) முழக்கு ; பெருகு ; தொனி ; மகிழ் . |
பூரிகம் | அப்பவருக்கம் . |
பூரிகலியாணி | ஒரு பண்வகை . |
பூரிகா | அகில்மரம் . |
பூரிகை | ஊதுகுழல் ; அப்பவருக்கம் ; நிரப்புகை ; பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் காற்றை உள்ளிழுப்பதுமான செயல் . |
பூரித்தல் | நிறைதல் ; குறைவற நிரம்புதல் ; களித்தல் ; பருத்தல் ; பொலிதல் ; மிகுதல் ; பூரகஞ்செய்தல் ; நிறைத்தல் ; பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல் ; படைத்தல் . |
பூரிதம் | நிரப்பப்பட்டது ; மிகுகளிப்பு ; மிகுதி . |
பூரிப்பு | களிப்பு ; நிறைவு ; பருமன் ; மிகுமகிழ்ச்சி ; மிகுதி ; ஒளி . |
பூரிமம் | தெருப்பக்கம் ; சாந்திட்டுக் கட்டிய தொட்டி . |
பூரிமாயன் | நரி . |
பூரிமாயு | நரி ; பழைமை . |
பூரியம் | ஊர் ; மருதநிலத்தூர் ; வேந்தர் வீதி ; அரசிருக்கை ; கலப்புநெல் ; பப்பரப்புளி . |
பூரியமாக்கள் | கீழ்மக்கள் ; கொடியவர் . |
பூரியர் | கீழ்மக்கள் ; கொடியவர் . |
பூரியரிசி | மட்டையரிசி ; தசராப் பண்டிகையில் வழங்கப்படும் கொடையரிசி ; வெள்ளையரிசி . |
பூரியார் | காண்க : பூரியர் . |
பூரு | குருகுலத்தரசருள் ஒருவன் ; புருவம் . |
பூருகம் | பூமியில் முளைக்கும் மரம் . |
பூருண்டி | மல்லிகைச்செடி ; வேலிப்பருத்தி ; காண்க : தேட்கொடுக்கி . |
பூருவகங்கை | நருமதை . |
பூருவகருமம் | ஊழ்வினை . |
பூருவகன்மம் | ஊழ்வினை . |
பூருவகௌளம் | ஒரு பண்வகை . |
பூருவஞானம் | முன்னனுபவத்தையறியும் அறிவு . |
பூருவதிக்கு | கிழக்கு . |
பூருவதிசை | கிழக்கு . |
பூருவபக்கம் | வளர்பிறைப்பக்கம் ; பிராது . |
பூருவம் | பழைமை ; கிழக்கு ; முன்பு ; காண்க : பூர்வாகமம் . |
பூரை | நிறைவு ; போதியது ; முடிவு ; இன்மை ; ஒன்றுக்கும் உதவாதவர் ; ஒன்றுக்கும் உதவாதது . |
பூரைபூரையெனல் | போதும் போதுமெனல் . |
பூரையிடுதல் | முடிவடைதல் ; அலுப்புண்டாக்குதல் . |
பூல் | காண்க : பூலா . |
பூலத்தி | மருதமரம் . |
பூலதை | பூநாகம் ; காண்க : கோடாஞ்சி . |
பூலா | செடிவகை ; மரவகை . |
பூலாச்செண்டு | பூச்செண்டு ; திருமணத்தில் நலங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம் . |
பூலித்தல் | உடம்பு பூரித்தல் . |
பூலோககயிலாயம் | திருக்குற்றாலம் , சிதம்பரம் போன்ற சிவதலங்கள் . |
பூலோகம் | மேலேழு உலகத்துள் மூன்றாவது . |
பூலோகவைகுண்டம் | திருவரங்கம் . |
பூவணி | பூமாலை ; சதுக்கம் . |
பூவணை | மலர்ப்பள்ளி . |
பூவந்தி | புன்கமரம் ; ஒரு மரவகை ; பலகாரவகை ; ஒருமருந்துவகை . |
பூவம்பர் | ஒரு மணப்பொருள்வகை . |
பூவம்பன் | மன்மதன் . |
பூவமளி | எண்வகைப் புணர்ச்சிக்கு இயைந்த மலர்ப்படுக்கை . |
பூவமுதம் | தேன் . |
பூவர்க்கம் | பூத்திரள் . |
பூவரசு | ஒரு மரவகை . |
பூவராகம் | திருமாலின் பன்றிப்பிறப்பு . |
பூவராகன் | பன்றியின் அடையாளம் குறித்த பொன்நாணயம் . |
பூவல் | சிவப்பு ; செம்மண் ; துரவு ; பூத்திடுகை . |
பூவல்லிகொய்தல் | பூக்கொய்தாடும் மகளிர் விளையாட்டுவகை . |
பூவலியம் | மண்ணுலகம் . |
பூவழலை | காண்க : பூநீறு . |
பூவன் | பிரமன் ; காண்க : செவ்வாழை ; வாழைவகை . |
பூவாடைக்காரி | மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது . |
பூவாடையம்மன் | மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது . |
பூவாணியன் | வெற்றிலை , காய்கறி , முதலியன விற்போன் . |
பூவாளி | மன்மதன் ; மன்மதனின் மலர்க்கணை . |
பூவிதழ் | மலரேடு . |
பூவிந்து | அப்பிரகம் ; வீரம் என்னும் மருந்துச் சரக்கு . |
பூவிந்துநாதம் | அப்பிரகம் . |
பூவிரணம் | ஆண்குறி மலரிலுள்ள புண் . |
![]() |
![]() |
![]() |