சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆடிப்பால் | ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு . |
| ஆடிப்பூரம் | ஆடிமாதத்துப் பூரநாளில் நிகழும் அம்மன் திருவிழா . |
| ஆடிப்பெருக்கு | பதினெட்டாம் பெருக்கு ; ஆடிமாதத்தில் காவேரிப் பெருக்கினைக் குறித்து எடுக்கப்படும் கொண்டாட்டம் . |
| ஆடிப்போதல் | கட்டுக்குலைந்துபோதல் . |
| ஆடியகூத்தன் | தில்லைமரம் . |
| ஆடியறவெட்டை | ஆடிமாதத்தில் உண்டாகும் பொருள்முடை . |
| ஆடு | வெற்றி ; விலங்குவகை ; மேடராசி ; கூத்து ; கூர்மை ; கொல்லுகை ; சமைக்கை ; காய்ச்சுகை . |
| ஆடுகால் | ஏற்றத்தில் துலாத்தாங்கு மரம் . |
| ஆடுகொப்பு | மகளிர் காதணிவகை . |
| ஆடுகொம்பு | கட்டுகொம்பு . |
| ஆடுசதை | முழங்காலின் கீழ்த்தசை . |
| ஆடுஞ்சரக்கு | வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் ; மருந்துச் சரக்கு . |
| ஆடுதல் | அசைதல் ; கூத்தாடுதல் ; விளையாடுதல் ; நீராடுதல் ; பொருதல் ; சஞ்சரித்தல் ; முயலுதல் ; பிறத்தல் ; சொல்லுதல் ; செய்தல் ; அனுபவித்தல் ; புணர்தல் ; பூசுதல் ; அளைதல் ; தடுமாறுதல் ; எந்திர முதலியவற்றில் அரைபடுதல் ; விழுதல் ; செருக்குதல் . |
| ஆடுதலி | அதிகாரியோடுகூட இருக்கும் ஊழியன் . |
| ஆடுதின்னாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு . |
| ஆடுதீண்டாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு . |
| ஆடுதுடை | சதைப்பற்றுள்ள தொடைப் பகுதி . |
| ஆடுதோடா | காண்க : ஆடாதோடை . |
| ஆடுநர் | கூத்தர் . |
| ஆடும்பாத்திரம் | நாட்டியப் பெண் . |
| ஆட்டைப்பாழ் | ஆண்டு முழுவதும் தரிசு கிடந்த நிலம் . |
| ஆட்டைவட்டம் | ஆண்டுதோறும் . |
| ஆட்டைவட்டன் | ஆண்டுதோறும் . |
| ஆட்டைவாரியர் | ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் . |
| ஆட்டைவிழா | ஆண்டுத் திருவிழா . |
| ஆட்டோசை | ஆட்டுக்குரலையொத்த தாரவிசையின் ஓசை . |
| ஆட்படுத்தல் | அடிமைகொள்ளுதல் . |
| ஆட்படுத்துதல் | காண்க : ஆட்படுத்தல் ; வளர்த்து ஆளாக்குதல் ; முன்னுக்குக் கொண்டு வருதல் . |
| ஆட்படுதல் | அடிமையாதல் ; உயர்நிலை அடைதல் ; உடல்நலமுறுதல் . |
| ஆட்பலி | நரபலி ; தெய்வத்தின் பொருட்டு மனிதனைப் பலியாகக் கொடுக்கை . |
| ஆட்பழக்கம் | மனிதப் பழக்கம் . |
| ஆட்பார்த்தல் | வேற்றாள் வராமல் நோக்குதல் ; ஆள்தேடுதல் . |
| ஆட்பாலவன் | அடியான் . |
| ஆட்பிடியன் | முதலை . |
| ஆட்பிரமாணம் | ஆள்மட்ட அளவு . |
| ஆடகக்குடோரி | மயிலடிக்குருந்து . |
| ஆடகச்சயிலம் | மேருமலை . |
| ஆடகத்தி | குங்குமபாடாணம் . |
| ஆடகம் | காண்க : துவரை ; நால்வகைப் பொன்னுள் ஒன்று , சிறந்த பொன் , உலோகக்கட்டி ; சிறுநாகப்பூ ; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை ; நானாழி . |
| ஆடகன் | பொன்னிறமுடைய இரணியகசிபு . |
| ஆடகி | காண்க : துவரை . |
| ஆடகை | காண்க : துவரை . |
| ஆடகூடம் | செம்புமலை . |
| ஆடங்கம் | துன்பம் ; தாமதம் . |
| ஆடம் | ஓரளவு ; காண்க : ஆமணக்கு . |
| ஆடம்பரம் | பகட்டுத் தோற்றம் ; பல்லிய முழக்கம் ; யானையின் பிளிற்றொலி ; ஆவேசம் . |
| ஆடமணக்கு | காண்க : ஆமணக்கு . |
| ஆடமாகிதம் | பெருங்காஞ்சொறி . |
| ஆடல் | அசைகை ; கூத்து ; துன்பம் ; செய்கை ; ஆளுகை ; விளையாட்டு ; புணர்ச்சி ; சொல்லுகை ; நீராடல் ; போர் ; வெற்றி . |
| ஆடல்கொடுத்தல் | இடங்கொடுத்தல் ; துன்பம் அனுபவித்தல் . |
| ஆடலிடம் | அரங்கம் . |
| ஆடலை | பூவாத மரம் ; அரசு . |
| ஆடவர்பருவம் | பாலன் ; காளை , குமாரன் , ஆடவன் , மூத்தோன் , முதியோன் . |
| ஆடவல்லான் | நடராசப்பெருமான் ; இராசராசன் ஆட்சியில் எடுத்தல் , முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் . |
| ஆடவலபெருமான் | திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் . |
| ஆடவள் | பெண் . |
| ஆடவன் | ஆண்மகன் ; இளைஞன் ; நான்காம் பருவத்தினன் . |
| ஆடவை | நடனசபை ; மிதுனராசி . |
| ஆடற்கூத்தியர் | அகக்கூத்தாடும் கணிகையர் . |
| ஆடற்றரு | கூத்துப்பாட்டு வகை . |
| ஆடனூல் | நாட்டிய நூல் . |
| ஆடா | கால்களில் கட்டியைப் போல் உண்டாகும் குதிரைநோய் . |
| ஆடாகாவிகம் | மரவுரி . |
| ஆடாதிருக்கை | ஆடுவாலன் திருக்கை ; அசையாதிருத்தல் . |
| ஆடாதோடை | ஒரு மருந்துச் செடி . |
| ஆடி | கூத்தாடுபவன் ; கண்ணாடி ; பளிங்கு ; நான்காம் மாதம் ; உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ; நாரை ; ஆணிவகை . |
| ஆடிக்கரு | ஆடி மாதத்து நீருண்ட மேகம் . |
| ஆடிக்கழைத்தல் | மணத்துக்குப் பின் முதல் ஆடி மாதத்தில் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்தல் . |
| ஆடிக்கால் | வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி . |
| ஆடிக்குறுவை | நெல்வகை . |
| ஆடிக்கோடை | ஆடிமாதத்தில் அறுவடையாகும் நெல் . |
| ஆடிச்சி | கழைக்கூத்தாடிப் பெண் . |
| ஆடிடம் | விளையாடுமிடம் . |
| ஆடிப்பட்டம் | விதையிடுதற்குரிய பருவம் . |
| ஆடிப்பண்டிகை | ஆடிமாதப் பிறப்புக் கொண்டாட்டம் . |
|
|
|