சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆத்திகம் | கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் . |
| ஆத்திகன் | கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் . |
| ஆத்திசூடி | ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று . |
| ஆத்திசூலை | குதிரை நோய்வகை . |
| ஆத்திட்டி | நீர்முள்ளி . |
| ஆத்தியந்தம் | காண்க : ஆதியந்தம் . |
| ஆத்தியந்திகபிரளயம் | பிரளயத்தால் உலகம் முடியும் காலம் . |
| ஆத்தியாத்துமிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
| ஆத்தியான்மிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
| ஆத்தியை | துர்க்கை . |
| ஆண்வழி | ஆண் சந்ததியிலிருந்து உண்டான பரம்பரை . |
| ஆணகம் | சுரைக்கொடி . |
| ஆணங்காய் | ஆண்பனையின் பாளை ; பனம்பூ . |
| ஆணத்தி | கட்டளை . |
| ஆணம் | நேயம் ; பற்றுக்கோடு ; கொள்கலம் ; குழம்பு ; குழம்பிலுள்ள காய் ; சிறுமை . |
| ஆணர் | பாணர் ; பாடகர் . |
| ஆணலி | ஆண்தோற்றம் மிக்க அலி . |
| ஆணவம் | செருக்கு ; காண்க : ஆணவமலம் ; கோளகபாடாணம் . |
| ஆணவமலம் | மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை . |
| ஆணவமறைப்பு | ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை . |
| ஆணழகன் | அழகு வாய்ந்தவன் . |
| ஆணன் | ஆண்மையுடையவன் ; அன்புடையோன் . |
| ஆணாடுதல் | விருப்பப்படி நடத்தல் ; |
| ஆணாப்பிறந்தோன் | மனிதன் ; ஆவிரை . |
| ஆணாள் | ஆண் நட்சத்திரங்கள் ; அவை : பரணி , கார்த்திகை , உரோகிணி , புனர்பூசம் , பூசம் , அத்தம் , அனுடம் , திருவோணம் , பூரட்டாதி , உத்திரட்டாதி . |
| ஆணாறு | மேற்குநோக்கி ஓடும் ஆறு . |
| ஆணி | இரும்பாணி ; அச்சாணி ; எழுத்தாணி ; மரவாணி ; உரையாணி ; புண்ணாணி ; மேன்மை ; ஆதாரம் ; ஆசை ; சயனம் ; பேரழகு ; எல்லை . |
| ஆணிக்கல் | பொன் நிறுக்கும் கல் . |
| ஆணிக்குருத்து | பனையின் அடிக்குருத்து . |
| ஆணிக்கை | உறுதி . |
| ஆணிக்கொள்ளுதல் | இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் ; இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் . |
| ஆணிக்கோவை | உரையாணி கோத்த மாலை . |
| ஆணிச்சவ்வு | விழிப்படலம் . |
| ஆணிச்சிதல் | சீப்பிடித்த புண்ணாணி . |
| ஆணித்தரம் | முதல்தரம் ; உறுதி . |
| ஆணிதைத்தல் | பொருத்த ஆணியடித்தல் ; கால் முதலியவற்றில் ஆணிபாய்தல் . |
| ஆணிப்புண் | உள்ளாணியுள்ள சிலந்தி . |
| ஆணிப்பூ | கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் . |
| ஆணிப்பூடு | கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் . |
| ஆணிப்பொன் | உயர் மாற்றுப் பொன் . |
| ஆணிமலர் | ஆணியின் தலை . |
| ஆணிமலர்திருப்பி | திருப்புளி . |
| ஆணிமுத்து | உயர்தரமான முத்து . |
| ஆணியச்சு | ஆணியுண்டாக்கும் அச்சு . |
| ஆணியம் | நாட்படி . |
| ஆணியிடுதல் | கண் நிலைக்குத்துதல் . |
| ஆணிவேர் | மூலவேர் . |
| ஆணு | நேயம் ; இனிமை ; நன்மை ; இரசம் . |
| ஆணுடம்பு | ஆண்குறி . |
| ஆணெழுத்து | உயிரெழுத்து . |
| ஆணை | கட்டளை ; அதிகாரம் ; நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி ; சூளுரை ; மெய் ; தடுக்கை ; இலாஞ்சனை ; வெற்றி ; ஆன்றோர் மரபு ; சிவபிரானது சிற்சத்தி . |
| ஆணையிடுதல் | கட்டளையிடுதல் ; சூளுரைத்தல் . |
| ஆணையோலை | கட்டளைத் திருமுகம் . |
| ஆணைவழிநிற்றல் | அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று . |
| ஆணைவிடுதல் | சூளுறவை நீக்குதல் . |
| ஆணொழிமிகுசொல் | இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினால் பெண்பாலாகப் பால் பிரியுஞ்சொல் . |
| ஆத்தம் | விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு . |
| ஆத்தல் | யாத்தல் ; அமைத்தல் ; கட்டுதல் . |
| ஆத்தவாக்கியம் | நட்பாளர் மொழி ; வேதசாத்திரங்கள் . |
| ஆத்தன் | விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் . |
| ஆத்தாடி | வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு . |
| ஆத்தாரமூத்தாள் | பூனைக்காலிக்கொடி . |
| ஆத்தா | தாய் ; பார்வதி . |
| ஆத்தாள் | தாய் ; பார்வதி . |
| ஆத்தானம் | அரசவை ; கோபுரவாயில் . |
| ஆத்தி | மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு . |
| ஆண்மகன் | ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் . |
| ஆண்மரம் | உள்வயிரமுள்ள மரம் ; காண்க : சேமரம் ; அழிஞ்சில் . |
| ஆண்மாரி | அடங்காக் குணமுள்ளவள் . |
| ஆண்மை | ஆளும்தன்மை ; ஆண்தன்மை ; வெற்றி ; வலிமை ; அகங்காரம் ; உடைமை ; வாய்மை . |
| ஆண்மைத்தனம் | ஆண்மைத்தன்மை . |
| ஆண்மைப் பொதுப்பெயர் | உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் . |
| ஆண்மையாளர் | வலிமையுற்றோர் ; திறம் படைத்தவர் ; வீரர் . |
| ஆண்மையிலி | பெண்தன்மை உடையவன் ; ஆளும் தன்மை இல்லாதவன் . |
| ஆண்வசம்பு | சிலும்பலுள்ள வசம்பு . |
|
|
|