சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆதம் | அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை . |
| ஆதம்பேதி | செப்புநெருஞ்சில் பூண்டு . |
| ஆதமிலி | ஆதரவற்றவன் , திக்கற்றவன் . |
| ஆதர் | அறிவில்லாதவர் ; குருடர் . |
| ஆதரணை | ஆதரவு . |
| ஆதரம் | அன்பு ; ஆசை ; உபசாரம் ; ஓடக்கூலி ; சிலம்பு . |
| ஆதரவு | அன்பு ; உதவி ; தோற்றுகை ; ஆதாரம் . |
| ஆதரவுச்சீட்டு | பற்றுச்சீட்டு . |
| ஆதரவுசொல்லுதல் | தேறுதல்சொல்லுதல் . |
| ஆதராதிசயம் | அன்புமிகுதி . |
| ஆதரிக்கை | அன்புசெய்தல் ; பேணுதல் . |
| ஆதரிசம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
| ஆதரிசனம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
| ஆதரித்தல் | ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் . |
| ஆதல் | ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் . |
| ஆதலால் | ஆகையால் . |
| ஆதவம் | காண்க : ஆதபம் ; ஒளி ; கொன்றைப்பூ . |
| ஆதவன் | காண்க : ஆதபன் ; வேதியன் ; சூரியகாந்தி . |
| ஆதளை | காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் . |
| ஆதளைமாதளை | மயக்கம் ; வருத்தம் . |
| ஆதன் | ஆன்மா ; அறிவில்லாதவன் ; குருடன் ; பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை ; அருகன் ; ஆரியன் ; வாதனை . |
| ஆதன்மை | பேதைமை . |
| ஆதன்மையால் | ஆகையால் . |
| ஆதனம் | காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து . |
| ஆதனமூர்த்தி | படிமம் ; இலிங்கம் . |
| ஆதாபாதா | மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை . |
| ஆதாயஞ்செலவு | வரவுசெலவு . |
| ஆதாயப்பங்கு | இலாபப் பங்கு . |
| ஆத்திரக்காரன் | அவசரப்படுபவன் . |
| ஆத்திரகம் | இஞ்சி . |
| ஆத்திரம் | பரபரப்பு ; சினம் . |
| ஆத்திரேயன் | சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
| ஆத்திரேயி | பூப்புள்ளவள் ; ஓர் ஆறு . |
| ஆத்திரை | காண்க : யாத்திரை ; சுற்றுலா . |
| ஆத்திரையன் | அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
| ஆத்திறைப்பாட்டம் | கால்நடை வரி . |
| ஆத்தின்னி | பாணன் . |
| ஆத்துமகத்தியை | தற்கொலை . |
| ஆத்துமகுப்தா | காண்க : பூனைக்காலி . |
| ஆத்துமசக்தி | ஆன்மாவுக்குரிய ஆற்றல் . |
| ஆத்துமசன் | மகன் . |
| ஆத்துமசிநேகிதன் | உயிர்த்தோழன் . |
| ஆத்துமசுத்தி | ஆத்துமாவின் தூய்மை ; காண்க : ஆன்மசுத்தி . |
| ஆத்துமஞானம் | தன்னையறியும் அறிவு . |
| ஆத்துமஞானி | தன்னையறிந்தவன் . |
| ஆத்துமதரிசனம் | ஆன்மாவின் நிலையை அறிகை ; காண்க : ஆன்மதரிசனம் . |
| ஆத்துமநாசம் | தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை . |
| ஆத்துமநிவேதனம் | உயிர்ப்பலி ; தன்னை அர்ப்பணஞ் செய்கை . |
| ஆத்துமபந்து | ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் . |
| ஆத்துமபுத்தி | தன் அறிவு . |
| ஆத்துமபோதம் | காண்க : ஆத்துமஞானம் . |
| ஆத்துமம் | உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| ஆத்துமராமன் | ஆத்ம திருப்தியுடையவன் . |
| ஆத்துமரூபம் | ஆன்மலாபம் ; காண்க : ஆன்மரூபம் . |
| ஆத்துமலாபம் | உயிர் உய்கை ; சொந்த இலாபம் ; தன்னையறிகை . |
| ஆத்துமவதம் | காண்க : ஆத்துமகத்தியை . |
| ஆத்துமவதிகாசனம் | நல்லிருக்கை என்னும் யோகாசனம் . |
| ஆத்துமவிசாரம் | ஆத்துமாவை அறியும் சிந்தனை . |
| ஆத்துமவிரக்கங்காட்டுதல் | மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் . |
| ஆத்துமா | உயிர் ; சீவான்மா ; உயிரி . |
| ஆத்துமாபகாரம் | ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை . |
| ஆத்துமார்த்தம் | ஆத்தும இலாபத்திற்குரியது ; தன்பொருட்டு ; மிக்க நட்பு . |
| ஆத்துமானந்தம் | தனக்குள் மகிழ்கை ; தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி . |
| ஆத்துமானுபவம் | தன்னைத் தான் அனுபவிக்கை . |
| ஆத்துமிகம் | காண்க : ஆத்தியாத்துமிகம் ; ஆன்மா சம்பந்தமுடையது . |
| ஆத்தை | தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் . |
| ஆத்மா | காண்க : ஆத்துமா . |
| ஆதங்கம் | நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை . |
| ஆதண் | நோய் ; வருத்தம் . |
| ஆதண்டை | காண்க : ஆதொண்டை . |
| ஆததாயிகள் | கொடியோர் ; அவராவார் ; தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , ஆறலைப்பார் , சூறைகொள்வார் , பிறனில் விழைவார் . |
| ஆதபத்திரம் | குடை ; வெண்குடை . |
| ஆதபம் | வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று . |
| ஆதபயோகம் | வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை . |
| ஆதபன் | சூரியன் . |
|
|
|