சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வறுகடலை | வறுத்த கடலை . |
| வறுகறி | வறுத்த கறி . |
| வறுகுதல் | பிறாண்டுதல் ; இறுகப்பிடித்தல் . |
| வறுங்காலம் | வறுமைக்காலம் ; நீரில்லாக்காலம் ; பஞ்சகாலம் . |
| வறுங்கோட்டி | அறிவிலார் கூட்டம் . |
| வறுங்கோடை | மழையில்லாத கோடை . |
| வறுத்தல் | பொரியச்செய்தல் ; தொந்தரவுபடுத்துதல் . |
| வறுதல் | வறுபடுதல் . |
| வறுநகை | புன்னகை . |
| வறுநிலம் | பாழ்நிலம் . |
| வறுநுகர்வு | உண்மையில்லா அனுபவம் . |
| வறுபடுதல் | தீயாற் பொரிதல் . |
| வறும்புனம் | அறுவடையானபின் தரிசாய்க் கிடக்கும் புன்செய்நிலம் ; பாலைநிலம் . |
| வறுமை | துன்பம் ; வெறுமை ; திக்கற்ற தனிமை . |
| வறுமொழி | பயனில்சொல் . |
| வறுவல் | எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த கறிவகை . |
| வறுவிது | குறையாக இருப்பது . |
| வறுவிதை | வறுத்த வித்து . |
| வறுவியோர் | வறிஞர . |
| வறுவிலி | திக்கற்றவன் ; வறியவன் . |
| வறுவோடு | காண்க : வறையோடு . |
| வறை | பொரிக்கறி . |
| வறைநாற்றம் | தீநாற்றம் . |
| வறைமுறுகல் | கருகிப்போனது ; பயனற்றது ; கரடுமுரடானது . |
| வறையல் | காண்க : வறை ; பிண்ணாக்கு . |
| வறையோடு | பொரிக்குஞ் சட்டியோடு ; பயனற்றவர் ; பயனற்றது . |
| வன்கண் | மனக்கொடுமை ; வீரத்தன்மை ; பகைமை ; பொறாமை ; கொடும்பார்வை . |
| வன்கண்ணன் | கொடுமையுள்ளவன் ; வீரமுள்ளவன் . |
| வன்கண்மை | கொடுமை ; வீரம் . |
| வன்கணம் | காண்க : வல்லினம் . |
| வன்கணாளன் | கொடியோன் ; வீரன் . |
| வன்கனி | செங்காய் . |
| வன்காய் | கடுக்காய் ; முற்றிய காய் . |
| வன்காரம் | வெண்காரம் ; வலாற்காரம் . |
| வன்கிழம் | தொண்டுகிழம் ; மிக்க இளமையிலே உண்டாகும் அறிவுமுதிர்ச்சி . |
| வன்கை | வலிய கரம் ; தோற்கருவிவகை . |
| வன்கொலை | கடுங்கொலை . |
| வன்சிறை | கடுங்காவல் ; மதில் ; கொடுமைக்கு உள்ளாக்கும் அடிமைத்தனம் . |
| வன்செலல் | விரைந்துசெல்லுகை . |
| வன்செவி | உணர்ச்சியற்ற காது . |
| வன்சொல் | கடுஞ்சொல் ; மிலேச்சமொழி . |
| வன்பகை | கடும்பகை . |
| வன்பாடு | வலியதன்மை ; முருட்டுத்தன்மை . |
| வன்பார் | இறுகிய பாறைநிலம் . |
| வன்பால் | காண்க : வன்பார் ; பாலைநிலம் ; குறிஞ்சிநிலம் ; மேடு . |
| வன்பு | வலிமை ; கடினத்தன்மை ; கருத்து ; தோல் முதலியவற்றின் வார் . |
| வன்புல் | புறக்காழுள்ள மரஞ்செடி முதலியன . |
| வன்புலம் | வலியநிலம் ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் . |
| வன்புறுத்தல் | தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல் . |
| வன்புறை | தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை ; தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக்கூறும் அகத்துறை ; வற்புறுத்திச் சொல்பவன் . |
| வன்புறையெதிரழிதல் | தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையில் தலைவி வருந்துதலைக்கூறும் அகத்துறை . |
| வன்பொறை | பெரும்பாரம் . |
| வன்மம் | தீராப்பகை ; வலிமை ; சூளுரை ; உடலின் முக்கிய பாகம் ; இரகசியச் சொல் . |
| வன்மரம் | அகக்காழுள்ள மரம் . |
| வன்மனம் | கன்னெஞ்சு . |
| வன்மா | குதிரை ; அரிமா . |
| வன்மான் | அரிமா . |
| வன்மி | பகைவன் . |
| வன்மித்தல் | கன்னெஞ்சு படைத்தல் ; தீராப்பகை காட்டுதல் ; சூளுரைத்தல் ; மரம் காழ் கொள்ளுதல் . |
| வன்மீகம் | கறையான்புற்று ; ஒருவகை உடல்வீக்கநோய் . |
| வன்மீன் | முதலை . |
| வன்மீனம் | முதலை . |
| வன்மை | வலிமை ; கடினம் ; வன்சொல் ; ஆற்றல் ; வலாற்காரம் ; சொல் அழுத்தம் ; கோபம் ; கருத்து ; வல்லெழுத்து . |
| வன்மொழி | கடுஞ்சொல் . |
| வன்றி | பன்றி . |
| வன்னசரம் | பலவகை மணிகளினாலியன்ற கழுத்தணிவகை . |
| வன்னம் | நிறம் ; எழுத்து ; தங்கம் . |
| வன்னரூபி | உமை ; கலைமகள் . |
| வன்னனை | காண்க : வருணனை . |
| வன்னி | நெருப்பு ; குதிரை ; வன்னிமரம் ; காண்க : கொடிவேலி ; தணக்கு ; வன்னியன் ; பிரமசாரி ; கிளி . |
| வன்னிகை | எழுதுகோல் . |
| வன்னிசகாயன் | நெருப்புக்குத் துணையாகிய காற்று . |
| வன்னித்தல் | வண்ணம்வைத்தல் ; வருணித்தல் . |
| வன்னிமன்றம் | வன்னிமரமுள்ள பொதுவிடம் . |
| வன்னியம் | வருணிக்கப்பட்டது ; சிற்றரசரின் தன்மை ; சுதந்தரம் ; பகைமை . |
|
|
|