சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆலிகை | அகலிகை . |
| ஆலிங்கணம் | தழுவுகை . |
| ஆலிடம் | தெருச்சிறகு . |
| ஆலித்தல் | ஒலித்தல் . |
| ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் . |
| ஆலிப்பு | ஆரவாரம் . |
| ஆலிம் | அறிந்தவன் . |
| ஆலியதம் | காண்க : சிறுகுறிஞ்சா . |
| ஆல¦டம் | இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை . |
| ஆல¦னகம் | துத்தநாகம் . |
| ஆலுதல் | ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் . |
| ஆலூகம் | காண்க : வில்வம் . |
| ஆலேகனம் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
| ஆலேகனி | எழுதுகோல் ; எழுத்தாணி . |
| ஆலேபனம் | பூசுகை . |
| ஆலேபூலேயெனல் | பொருளின்றிப் பேசுதற்குறிப்பு . |
| ஆலை | கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை . |
| ஆலைக்குழி | கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் . |
| ஆலைத்தொட்டி | கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் . |
| ஆலைபாய்தல் | ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் . |
| ஆலைமாலை | தொந்தரை ; மயக்கம் . |
| ஆலோகம் | பார்வை ; ஒளி . |
| ஆலக்கொடிச்சி | காண்க : ஆலக்கச்சி . |
| ஆலகண்டன் | கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் . |
| ஆலகம் | காண்க : ஆமலகம் . |
| ஆலகாலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை . |
| ஆலகாலி | காளி . |
| ஆலகிரீடை | காண்க : அலரி . |
| ஆலங்கட்டி | கல்மழை . |
| ஆலாங்கட்டி | கல்மழை . |
| ஆலங்காட்டாண்டி | வரிக்கூத்துவகை . |
| ஆலச்சுவர் | சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் . |
| ஆலசம் | சோம்பு . |
| ஆலசியம் | சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு . |
| ஆலத்தி | காண்க : ஆரத்தி . |
| ஆலத்தியெடுத்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலத்திவழித்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலதரன் | நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் . |
| ஆலந்தை | ஒரு சிறுமரம் . |
| ஆலம் | நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு |
| ஆலம்பம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பனம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பலிகிதம் | எழுத்துக்கூட்டிலக்கணம் . |
| ஆலம்பி | அரிதாரம் . |
| ஆலமர்கடவுள் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமர்செல்வன் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமரம் | மரவகை . |
| ஆலமுடையோன் | துரிசு . |
| ஆலமுண்டோன் | பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் . |
| ஆலயம் | தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் . |
| ஆலயவிஞ்ஞானம் | சாகும்வரை நிற்கும் உணர்ச்சி . |
| ஆவல் | ஒலி ; மயிற்குரல் . |
| ஆலலம் | திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை . |
| ஆலவட்டம் | பெருவிசிறி ; விசிறி . |
| ஆலவன் | ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் . |
| ஆலவாய் | பாம்பு ; மதுரை . |
| ஆலவாலம் | மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் . |
| ஆலவிருட்சம் | ஆலமரம் ; ஆதொண்டை . |
| ஆலா | கடற்கரைப் பறவைவகை . |
| ஆலாகலம் | காண்க : ஆலகாலம் . |
| ஆலாசியம் | மதுரை ; ஆண்முதலை . |
| ஆலாட்டு | சிறிது உலரவைத்தல் . |
| ஆலாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலவாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலாத்தி | காண்க : ஆலத்தி . |
| ஆலாத்து | கப்பலின் பெருங்கயிறு . |
| ஆலாதாடை | அவுரி . |
| ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் . |
| ஆலாபம் | உரையாடல் . |
| ஆலாபனம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபித்தல் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபினி | சுரபேதம் . |
| ஆலாலம் | துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு . |
| ஆலாவர்த்தம் | காண்க : ஆலவட்டம் . |
| ஆலி | மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் . |
|
|
|