சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆனந்தரியம் | இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு . |
| ஆனந்தவருவி | இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு . |
| ஆனந்தவல்லி | பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் . |
| ஆனந்தவுவமை | மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் . |
| ஆனந்தவோமம் | ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு . |
| ஆனந்தன் | சிவன் ; அருகன் . |
| ஆனந்தான்மவாதி | ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் . |
| ஆனந்தி | பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை . |
| ஆனந்தித்தல் | மகிழ்வடைதல் . |
| ஆனந்தை | உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை . |
| ஆனம் | எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் . |
| ஆனமட்டும் | கூடியவரை . |
| ஆனயம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
| ஆனயனம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
| ஆனர்த்தகம் | போர் ; நாடகசாலை ; ஒரு நாடு . |
| ஆனவர் | இடையர் . |
| ஆனவன் | நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு . |
| ஆனவாள் | கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் . |
| ஆனனம் | முகம் . |
| ஆனா | நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி . |
| ஆனாகம் | நீட்சி ; வயிற்றுப்பொருமல் நோய் . |
| ஆனாங்குருவி | குருவிவகை . |
| ஆனாமை | நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் . |
| ஆனாயகலை | கண்ணறைத்தசை . |
| ஆனாயம் | வாயுக்கண்ணறை . |
| ஆனாயன் | மாட்டிடையன் . |
| ஆனால் | ஆயின் ; ஆகையால் . |
| ஆனாலும் | ஆயினும் . |
| ஆனி | மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு . |
| ஆனிக்கருந்தலை | ஆனிமாதக் கடைசி . |
| ஆனித்தூக்கம் | ஆனிமாதத்தில் கடலின் அமைதி . |
| ஆனியம் | நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் . |
| ஆனிரை | பசுக்கூட்டம் . |
| ஆனிலன் | வாயு புதல்வனாகிய அனுமான் ; பீமன் . |
| ஆனிலை | பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் . |
| ஆனிலையுலகம் | காண்க : ஆனுலகு . |
| ஆனீர் | கோமூத்திரம் . |
| ஆனுகூலியம் | அனுகூலமுடைமை . |
| ஆனுதல் | நீங்குதல் . |
| ஆனும் | ஆயினும் ; ஆவது . |
| ஆனுலகு | கோலோகம் . |
| ஆனெய் | பசுவின் நெய் . |
| ஆனேறு | எருது . |
| ஆனை | யானை ; காண்க : அத்தி : ஆத்தி . |
| ஆனைக்கசடன் | நெல்வகை . |
| ஆனைக்கண் | அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி . |
| ஆனைக்கரடு | ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் . |
| ஆனைக்கள்ளிமுளையான் | பூடுவகை . |
| ஆனைக்கற்றலை | கடல்மீன்வகை . |
| ஆனைக்கற்றாழை | ஒருவகை நீண்ட கற்றாழை . |
| ஆனைக்காசு | நாணயவகை . |
| ஆனைக்காயம் | காண்க : ஆனைப்பெருங்காயம் . |
| ஆனைக்காரன் | யானைப்பாகன் . |
| ஆனைக்காரை | காண்க : ஒதிமரம் . |
| ஆனைக்கால் | பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு . |
| ஆனைக்குப்பு | சதுரங்க விளையாட்டு . |
| ஆனைக்குரு | மரவகை . |
| ஆனைக்குருகு | அன்றில் . |
| ஆனைக்குழி | யானை பிடிக்குமிடம் . |
| ஆனைக்குன்றிமணி | காண்க : மஞ்சாடிமரம் . |
| ஆனந்தக்களிப்பு | பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் . |
| ஆனந்தகானம் | காசி . |
| ஆனந்தகுறுவை | நெல்வகை . |
| ஆனந்ததாண்டவம் | நடராசர் புரியும் நடனம் . |
| ஆனந்ததீர்த்தர் | மத்துவாசாரியார் . |
| ஆனந்தநித்திரை | யோகநித்திரை . |
| ஆனந்தநிருத்தம் | காண்க : ஆனந்ததாண்டவம் . |
| ஆனந்தப்பையுள் | கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை . |
| ஆனந்தபரவசம் | மகிழ்ச்சியால் தன்னை மறக்கை . |
| ஆனந்தபைரவம் | சிந்தூரவகை . |
| ஆனந்தபைரவி | ஒரு பண் . |
| ஆனந்தம் | பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை . |
| ஆனந்தமயகோசம் | உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று . |
| ஆனந்தமயம் | இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் . |
| ஆனந்தமூலி | கஞ்சா . |
|
|
|