சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இயன்மொழிவாழ்த்து | தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை . |
| இயனம் | கள்ளிறக்குவோனது கருவிபெய்புட்டில் . |
| இயனெறி | நல்லொழுக்கம் . |
| இயாகதம் | சிற்றகத்தி . |
| இயாகம் | கொன்றை ; பாண்டம் ; வேள்வி . |
| இயுசாவியம் | கொன்றைமரம் . |
| இயேசு | கிறிஸ்துநாதரின் பெயர் . |
| இயை | அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை . |
| இயை | (வி) சேர் . |
| இயைத்தல் | பொருத்துதல் . |
| இயைதல் | பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் . |
| இயைந்துரை | பல பொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி . |
| இயைபிலிசைக்குறி | இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் . |
| இயைபின்மை நீக்கம் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
| இயைபின்மை நீக்கல் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
| இயைபின்மையணி | பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி . |
| இயைபு | சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று . |
| இயைபுத்தொடை | ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
| இயைபுருவகம் | பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று . |
| இயைபுவண்ணம் | இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் . |
| இயைபுவனப்பு | ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல் . |
| இயைபுளன் | புகழாளன் . |
| இயைமே | வாழைமரம் . |
| இயைய | ஓர் உவம உருபு . |
| இயைவது | தக்கது . |
| இயைவு | இணக்கம் ; பொருத்தம் ; சேர்க்கை . |
| இர் | முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் . |
| இர | இரவு ; இரத்தல் . |
| இரக்கக்குறிப்பு | ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி . |
| இயலசை | நேரசை ; நிரையசை . |
| இயலடி | இயற்சீரால் அமைந்து வரும் பாவடி . |
| இயலணி | இயற்கையழகு . |
| இயலறிவு | சொற்களின் பயிற்சி . |
| இயலாசிரியன் | நாட்டிய நூல் கற்பிப்போன் . |
| இயலாமை | கூடாமை . |
| இயலுதல் | கூடியதாதல் ; நேர்தல் ; பொருந்துதல் ; தங்குதல் ; செய்யப்படுதல் ; அசைதல் ; நடத்தல் ; உலாவுதல் ; உடன்படுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; போட்டிபோடுதல் ; சித்திர முதலியன எழுதுதல் . |
| இயலொழுக்கம் | நல்லொழுக்கம் . |
| இயவம் | தவசவகை ; நெல் ; வாற்கோதுமை . |
| இயவன் | தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் . |
| இயவனன் | யவனன் ; கம்மாளன் ; ஓவியன் . |
| இயவானி | ஓமம் . |
| இயவு | வழி ; செலவு ; காடு ; ஊர் . |
| இயவுள் | தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை . |
| இயவை | வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை . |
| இயற்காட்சி | நற்காட்சி ; சரியாக உணர்கை ; நல்ல நம்பிக்கை . |
| இயற்குணப் பெயர் | தொழிலை அன்றிப் பண்பே குறிக்கும் பெயர் . |
| இயற்கை | இயல்பான தன்மை ; வழக்கம் ; இலக்கணம் ; நிலைமை ; கொள்கை . |
| இயற்கை அறிவு | இயல்பாக அமைந்த அறிவு . |
| இயற்கைக்குணம் | ஒன்றன் உடனாய் அமைந்த தன்மை . |
| இயற்ககைப் புணர்ச்சி | தலைவனும் தலைவியும் தெய்வத்தால் கூடும் முதற் கூட்டம் . |
| இயற்கைப் பொருள் | தோன்றிய காலம் தொடங்கி ஒருநிலையவாகிய பொருள் . |
| இயற்கையளபெடை | இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை . |
| இயற்கையின்பம் | இயற்கைப் புணர்ச்சியால் நேரும் இன்பம் ; இயற்கை தரும் இன்பம் . |
| இயற்கையுணர்வினனாதல் | இறைவன் எண்குணங்களுள் ஒன்று . |
| இயற்சீர் | அகவல் உரிச்சீர் . |
| இயற்சீர் வெண்டளை | மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை . |
| இயற்சொல் | எல்லார்க்கும் பொருள் விளங்கும் சொல் . |
| இயற்படமொழிதல் | இயல்பு பொருந்தச் சொல்லுதல் ; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை . |
| இயற்பலகை | சங்கப் பலகை . |
| இயற்பழித்தல் | தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை . |
| இயற்பா | இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி . |
| இயற்பெயர் | வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் . |
| இயற்றமிழ் | செந்தமிழ் ; இலக்கியத் தமிழ் ; முத்தமிழுள் ஒன்று . |
| இயற்றல் | செய்தல் ; முயற்சி . |
| இயற்றளை | காண்க : இயற்சீர்வெண்டளை . |
| இயற்றி | முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை . |
| இயற்றியான் | செய்தவன் . |
| இயற்று | பாத்திரம் |
| இயற்றுதல் | செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் . |
| இயற்றுதற்கருத்தா | தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் . |
| இயற்றும்வினை | தன்வினை . |
| இயறல் | முத்தி ; போதல் . |
| இயன்ஞானம் | நல்லறிவு . |
| இயன்மகள் | கலைமகள் . |
| இயன்மணம் | இயற்கையான மணம் . |
|
|
|