சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இருத்தல் | உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் . |
| இருத்தி | சித்தி ; வட்டி . |
| இருத்திப்பேசுதல் | அழுத்திச் சொல்லுதல் . |
| இருத்திப்போடுதல் | நிலைக்கச்செய்தல் ; அசையாமல் செய்தல் . |
| இருத்தினன் | இருத்துவிக்கு ; யாக புரோகிதன் , வேள்வி செய்து வைப்பவன் . |
| இருத்து | வயிரக்குற்றங்களுள் ஒன்று ; நிலையான பொருள் ; அமுக்குகை . |
| இருத்துதல் | உட்காரச் செய்தல் ; தாமதிக்கச்செய்தல் ; அழுத்துதல் ; அடித்து உட்செலுத்துதல் ; நிலைபெறச் செய்தல் ; கீழிறக்குதல் . |
| இருத்துவிக்கு | காண்க : இருத்தினன் . |
| இருத்தை | சேங்கொட்டை ; சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி எனப்படும் நான்கு , ஒன்பது , பதினான்காம் பக்கங்கள் ; இருபத்து நான்கு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை ; நாழிகை வட்டில் . |
| இருதம் | காண்க : உஞ்சவிருத்தி ; நீர் ; மெய்ம்மை . |
| இருதயகமலம் | உள்ளத்தாமரை . |
| இருதயத்துடிப்பு | மார்பு படபடவென்று அடித்துக்கொள்ளுகை . |
| இருதயம் | இதயம் ; மனம் ; நேசத்துக்கு உறைவிடமான இடம் ; கருத்து ; நடு . |
| இருதலை | இருமுனை . |
| இருதலைக்கபடம் | விலாங்குமீன் . |
| இருதலைக்கொள்ளி | இரு முனையிலும் தீயுள்ளகட்டை ; எப்பக்கத்தும் துன்பஞ் செய்வது . |
| இருதலை ஞாங்கர் | இருதலையும் கூருள்ள முருகன் வேல் . |
| இருதலைநோய் | எழுஞாயிறு என்னும் நோய் . |
| இருதலைப் பகரங்கள் | எழுத்துகளை உள்ளடக்கி நிற்கும்[ ] என்னும் குறியீடுகள் . |
| இருதலைப்பாம்பு | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புடையன் | இருதலை மணியன் , மண்ணு(ணி)ளிப் பாம்பு . |
| இருதலைப்புள் | இரண்டு தலைகளுள்ள பறவை . |
| இருதலைமணியம் | நண்பன்போல் நடித்து இருவரிடையே கலகம் விளைவிக்கும் தொழில் |
| இருதலைமணியன் | பாம்பில் ஒருவகை ; கோள்சொல்லுவோன் . |
| இருதலை மாணிக்கம் | ஒரு மந்திரம் ; முத்தி பஞ்சாட்சரம் . |
| இருதலைமூரி | காண்க : இருதலைப்பாம்பு . |
| இருதலைவிரியன் | பாம்புவகை . |
| இருதாரைக் கத்தி | இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி . |
| இருதிணை | உயர்திணை அஃறிணை ; இயங்குதிணை நிலைத்திணை . |
| இருது | ருது ; இரண்டு மாத பருவம் ; மகளிர் பூப்பு ; முதற் பூப்பு ; தக்க காலம் ; கடவுளின் முத்தொழில் ; பிரபை . |
| இருதுகாலம் | மாதவிடாய்க் காலம் ; கரித்தரிக்கும் காலம் . |
| இருதுசங்கமணம் | பூப்புற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யுஞ் சடங்கு . |
| இருதுசந்தி | இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம் . |
| இருதுசாந்தி | பூப்புற்ற பெண்ணுக்குத் தீங்கு நேரிடாதபடி செய்யும் சடங்கு ; சோபனகலியாணம் ; சாந்திக் கலியாணம் . |
| இருதுநுகர்பு | பருவங்கட்குரிய அனுபவம் . |
| இருதுமதி | பூப்படைந்த பெண் , கருத்தரித்தற்குரிய நிலையிலிருப்பவள் . |
| இருகுறள் நேரிசைவெண்பா | இரண்டு குறட்பாக்களைக் கொண்ட நேரிசைவெண்பாவகை . |
| இருகை | இரண்டு கைகள் ; இருபக்கம் . |
| இருகோட்டறுவை | முன்னும் பின்னும் தொங்கலாக விடும் துகில் . |
| இருங்கரம் | பதக்கு . |
| இருசகம் | மாதுளை . |
| இருசாதி | கலப்புச் சாதி . |
| இருசால் | தண்டற்பணம் செலுத்துகை ; கருவூலத்துக்கு அனுப்பும் பணம் . |
| இருசி | பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; ஒரு பெண்பிசாசு . |
| இருசீர்ப்பாணி | இரட்டைத் தாளம் . |
| இருசு | நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் . |
| இருசுகந்தபூண்டு | மருக்கொழுந்து . |
| இருசுடர் | சந்திரசூரியர் . |
| இருசுழி | இரட்டைச்சுழி . |
| இருஞ்சிறை | காவல் ; மதில் ; நரகம் . |
| இருட்கண்டம் | கழுத்தணிவகை . |
| இருட்கண்டர் | சிவபெருமான் . |
| இருட்சரன் | இருட்டில் திரிவோன் ; இராக்கதன் . |
| இருட்சி | இருள் ; இருட்டு ; மயக்கம் . |
| இருட்டு | இருள் ; அறியாமை . |
| இருட்டுதல் | இருளடைதல் ; மந்தாரமிடுதல் . |
| இருட்பகை | சூரியன் . |
| இருட்பகைவன் | சூரியன் . |
| இருட்படலம் | இருளின் தொகுதி . |
| இருட்பிழம்பு | இருளின் தொகுதி . |
| இருட்பூ | ஒருவகை மரம் . |
| இருடி | ஆந்தை ; முனிவன் வேதம் . |
| இருடிகம் | இந்திரியம் . |
| இருடீகம் | இந்திரியம் . |
| இருடிகேசன் | திருமால் . |
| இருடீகேசன் | திருமால் . |
| இருண்டி | சண்பகம் . |
| இருண்மதி | தேய்பிறைச் சந்திரன் ; அமாவாசை . |
| இருண்மலம் | ஆணவமலம் |
| இருண்மை | இருளுடைமை ; இருண்டிருக்கும் தன்மை . |
| இருணபாதகன் | கடன் தீர்க்காமல் மோசம் செய்பவன் . |
| இருணம் | உவர்நிலம் ; கடன் ; கழிக்கப்படும் எண் ; கோட்டை ; நிலம் ; நீர் . |
| இருணாள் | இருள் நாள் ; தேய்பிறைப் பக்கத்து நாள் . |
| இருணி | பன்றி . |
| இருணிலம் | நரகம் . |
|
|
|