சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நெ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ எ) . |
நெக்கல் | தளர்ந்தது ; அறக்கனிந்தது ; அழுகல் . |
நெக்கு | தள்ளு ; நெகிழ்ச்சி ; உடைபடல் . |
நெக்குடைதல் | காண்க : நெக்குருகுதல் . |
நெக்குதல் | கிளப்புதல் ; துரத்தியடித்தல் ; கூட்டம் நெருக்குதல் ; கோலிக்கொட்டுதல் . |
நெக்குருகுதல் | இளகுதல் . |
நெக்குரோதம் | ஆலமரம் . |
நெக்குவிடுதல் | பிளவுபடுதல் ; பொருத்துவாய் விடுதல் . |
நெகல் | நெகிழ்தல் , தளர்தல் ; கனிதல் . |
நெகிடி | நெருப்புக்குவை . |
நெகிழ்ச்சி | காதில்வரும் புண்கட்டி , எழுச்சி ; தளர்ச்சி ; மனமிரங்குகை . |
நெகிழ்த்தல் | தளர்த்துதல் ; மலர்த்துதல் ; பிரித்தல் ; நசுக்குதல் ; எய்தல் . |
நெகிழ்தல் | குழைதல் ; மெலிதல் ; பொசிதல் ; பொடியாதல் ; மலர்தல் ; இளகல் ; கட்டுத் தளர்தல் ; மனமிரங்குதல் ; நிலைகுலைதல் ; நழுவல் ; விட்டுநீங்குதல் . |
நெகிழ்ப்பு | குழைவு . |
நெகிழ்வு | பிரிவு ; தளர்வு ; மலர்தல் . |
நெகிழம் | பாதச்சிலம்பு . |
நெகிழி | பாதச்சிலம்பு ; கொள்ளிக்கட்டை . |
நெகுதல் | கரைதல் ; உருகுதல் ; மனமிரங்குதல் ; வருந்துதல் ; கழலுதல் ; கெடுதல் ; பொடியாதல் . |
நெச்சி | காண்க : கடுக்காய் . |
நெசவு | நெசவுத்தொழில் ; நெசவின் இழையமைப்பு . |
நெஞ்சகம் | மனம் . |
நெஞ்சடித்தல் | அச்சம் முதலியவற்றால் இதயம் படபடக்கை . |
நெஞ்சடைத்தல் | மார்படைப்பு . |
நெஞ்சடைப்பான் | மாட்டுநோய்வகை . |
நெஞ்சடைப்பு | மார்படைப்பு ; பொதி பறியாமற் செய்யும் பயிர்நோய் . |
நெஞ்சம் | காண்க : நெஞ்சு ; அன்பு . |
நெஞ்சழிதல் | மதிமயங்கல் ; மனம்குலைதல் ; தன்னடக்கங் கெடுதல் . |
நெஞ்சறிசுட்டு | சொல்லாற் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்கவருஞ் சுட்டு . |
நெஞ்சறிவுறுத்தல் | மனத்துக்கறிவித்தல் . |
நெஞ்சன் | துணிவுடையோன் ; செருக்குள்ளவன் . |
நெஞ்சாங்கட்டை | மார்பெலும்பு , நெஞ்செலும்பு ; பிணஞ்சுடுவதற்கு நெஞ்சுப்பக்கமாக வைக்குங் கட்டை . |
நெஞ்சாங்குலை | ஈரற்குலை ; மார்பு ; இதயம் ; மார்புக்குழி . |
நெஞ்சாங்குழி | தொண்டைக்குழி . |
நெஞ்சார | மனமார . |
நெஞ்சாறல் | துன்பம் . |
நெஞ்சிற்கல் | கவலை ; துன்பம் . |
நெஞ்சிற்பாரம் | தாங்கமுடியாத பொறுப்பு ; துன்பம் . |
நெஞ்சு | மனம் ; இதயம் ; மார்பு ; நடு ; திண்ணக்கம் ; தொண்டை ; துணிவு . |
நெஞ்சுக்குத்து | மார்புவலி . |
நெஞ்சுகரித்தல் | தொண்டை கரகரக்கை ; பொறாமைகொள்ளுகை . |
நெஞ்சுகலத்தல் | ஒருவனோடு கலந்தாய்தல் ; மனமொன்றுபடுதல் . |
நெஞ்சுகாய்தல் | நெஞ்சு வறளுகை ; மனஞ் சோர்கை . |
நெஞ்சுச்சளி | நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை . |
நெஞ்சுத்தடுமன் | நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை . |
நெஞ்சுத்துடிப்பு | இதயமடிக்கை . |
நெஞ்சுத்துணிகரம் | மனவுறுதி . |
நெஞ்சுத்துணிவு | மனவுறுதி . |
நெஞ்சுதுடித்தல் | இதயந்துடிக்கை ; மனமிரங்குதல் . |
நெஞ்சுப்புண் | தொண்டைப்புண் . |
நெஞ்சுபதறுதல் | மனநடுங்குதல் . |
நெஞ்சுபுண்ணாதல் | மனநோதல் ; தொண்டை புண்ணாதல் . |
நெஞ்சுரப்பு | மனக்கடுமை . |
நெஞ்சுரம் | மனக்கடுமை ; மனவூக்கம் ; தடித்தனம் . |
நெஞ்சுருகுதல் | மனமிளகுதல் . |
நெஞ்சுவலி | மார்புவலி . |
நெஞ்சுவிடுதூது | ஒரு நூல் ; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை . |
நெஞ்சுள் | மனம் . |
நெஞ்சுளுத்தல் | மனமுரிதல் . |
நெஞ்சுறைப்பு | மனக்கடுமை ; துணிவு . |
நெஞ்செரிச்சல் | பொறாமை . |
நெஞ்செரிதல் | கோபத்தால் மனங்கொதித்தல் ; பொறாமைப்படல் . |
நெஞ்சைப்பிளத்தல் | துன்பம் முதலியன மனத்தை வருத்துதல் . |
நெஞ்சோர்மம் | நெஞ்சுத்துணிவு . |
நெட்டங்கம் | செருக்கு ; செருக்கினாற் பழித்துரைக்கும் மொழி . |
நெட்டநெடுமை | மிகுநீளம் . |
நெட்டம் | நெடுமை ; செங்குத்து ; மிளகு . |
நெட்டாங்கு | செங்குத்து ; நீளவாட்டு ; காண்க : நெட்டங்கம் ; அழகுகாட்டுகை ; வடமுனை தென்முனைகளைத் தொடும் நெடுக்குக்கோடு , தீர்க்கரேகை . |
நெட்டாயம் | நெட்டைக்குத்தாகச் செங்கல் அடுக்கும் முறை . |
நெட்டி | உடற்பொருத்து ; எலும்பு ; சுடக்கு ; சோம்பல் ; ஒரு புல்வகை . |
நெட்டிசை | விருத்தப்பாவில் நீண்டொலிக்கும் இசை . |
நெட்டிடை | நெடுந்தொலைவு . |
நெட்டிமுறித்தல் | சோம்பல் முறித்தல் ; சுடக்கெடுத்தல் ; வருத்துதல் . |
நெட்டியெடுத்தல | சோம்பல் முறித்தல் ; சுடக்கெடுத்தல் ; வருத்துதல் . |
நெட்டில் | மூங்கில் . |
நெட்டிலிங்கம் | அசோகமரம் . |
![]() |
![]() |