4.3 உயிர் உடைய பொருள் வகைகள் உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம். • ஓர் அறிவு உயிர் மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள். எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம் • ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்) மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும். எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு • மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்) மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள். எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு • நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்) மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை. எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு • ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்) மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும். எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர் இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. |
1)
|
உரிச்சொல் என்றால் என்ன? | [விடை] |
2)
|
உரிச்சொல்லின் இயல்பு யாது? | [விடை] |
3)
|
பண்பு எனப்படுவது யாது? | [விடை] |
4)
|
உயிர்ப்பொருள்கள் எத்தனை வகைப்படும்? | [விடை] |
5)
|
மூன்றறிவு உடைய உயிர்களுள் ஒன்றினைக் கூறுக. | [விடை] |