4.7 தொகுப்புரை

பொதுமக்கள் உள்ளத்தைத் தம் பதிகங்களாலும், பாசுரங்களாலும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஈர்த்துப் பழைய சமயத்திற்குத் திருப்பினர். இம்முயற்சிக்குப் பல்லவ மன்னர்களது ஆதரவும், மக்களது ஆதரவும் கிடைத்தன. அறக்கருத்துகளை நேரடியாகச் சொல்ல முனையாது கதைகளுடே பொதிந்து தரும் வண்ணம் கதைசார் நூல்களை ஆக்குதல் மூலம் சமண, பௌத்தப் புலமை வல்லார் முயன்றனர். எல்லா வகை நூல்களும் தமிழுக்குக் கொடையாகவே அமைந்தன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
கலம்பகம் என்றால் என்ன? தமிழில் அமைந்த முதல் கலம்பக நூலையும், அதன் பாட்டுடைத் தலைவனையும் பற்றிக் கூறுக.
[விடை]
2. தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் எது? எழுதியவர் யார்? [விடை]
3. விருத்தம் என்பது பற்றி எழுதுக. [விடை]
4. சமணப் பெரியோர் வரலாற்றைக் கூறும் நூல் யாது? [விடை]
5. சமணப் பாவை நூல் எது? [விடை]
6.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய புத்த சமய நூல்களது பெயர்களைத் தருக.
[விடை]