நண்பர்களே! இதுவரை சோழர் காலத் தமிழில் எழுத்தியல்
குறித்த பல செய்திகளைப் படித்தீர்கள்! இந்தப் பாடத்தின்
மூலமாக என்னென்ன செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள்
என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
•
சோழர் காலத் தமிழை அறிய
உதவும் இலக்கிய, இலக்கணங்கள், பிற ஆதாரங்களான கல்வெட்டுகள்,
செப்பேடுகள், சாசனங்கள், ஆவணங்கள் போன்ற செய்திகளை அறிந்து
கொண்டீர்கள்.
•
அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில்
ஏற்பட்ட பல்வேறு உயிரெழுத்துகளின் மாற்றங்களையும், ஒலிப்பு
முறைகளில் ஏற்பட்ட வேறுபாட்டினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
•
சோழர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி
மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கெல்லாம் ஆளாகின என்பதையும்,
அதற்கான சான்றுகளையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டிருப்பீர்கள்!
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இடையண்ண
ஒலி பல்லினச் சாயல் பெறுதலுக்கு எடுத்துக்காட்டுகள்
இரண்டினைக் கூறுக.