தன் மதிப்பீடு : விடைகள் - II

5. கதைப்பாடலின் பயன் பற்றிக் கூறுக.

கதைப்பாடல் கேட்போருக்கு, குறிப்பாகப் பெண்களுக்குச் சிறந்த பொழுது போக்கும் கலையாகப் பயன்படுகின்றது. மேலும் புராணச் செய்திகள், பக்தி மற்றும் அறம் தொடர்பான சிந்தனைகளை அறிவுறுத்தும் சாதனமாகவும் திகழ்கின்றது.