தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2. நாட்டுப்புறக் கதையை வரையறுத்துக் கூறுக?

நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டோ கற்பனையாகவோ ஒரு மக்கட் குழுவினரிடையே உருவாக்கப்படும் ஒரு கதை, ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அன்றாட வாழ்க்கையில் உரை நடையாக எடுத்துரைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவி, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக் கொண்டதாக வழங்கப்படுவதை நாட்டுப்புறக் கதை என்று கூறலாம்.