தெருக்கூத்து
|
தமிழகத்தின்
மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம்
தெருக்கூத்து
ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக்
கொண்டு நிகழ்த்தப்படுவதால்
தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது. ஒரு
கதையைப் பாடியும் ஆடியும்
உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும்
கலையாக இது விளங்குகிறது.
|
சிலபகுதிகளில்
தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை
இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால்
கட்டைக் கூத்து எனவும்
வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய
ஒப்பனை இல்லாமலும்
தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு.
|
தெருக்கூத்தில்
எடுத்துரைக்கப்படும் கதைப்
பொருளிற்கேற்ப
ஒப்பனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.ஆண்களே
பெண் வேடமிட்டு
நடிக்கின்றனர்.
கட்டியக்காரன் என்ற
நகைச்சுவைப் பாத்திரம்
தெருக்கூத்தில் மிகவும் குறிப்பிடத்
தக்கதாகும்.
|
வடார்க்காடு,
தென்னார்க்காடு, செங்கல்பட்டு,
வேலூர் மாவட்டப்
பகுதிகளில்
நடைபெறும் திரௌபதையம்மன்
விழாக்களின் போது
வழிபாட்டுச் சடங்கின் ஒரு
பகுதியாகத் தெருக்கூத்து இடம்பெற்று
வருகிறது. இதில்
பெரும்பாலும் மகாபாரதக் கதைச்
சம்பவங்களே
கூத்தாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
|

(
தெருக்கூத்து )
பெரிதாய்க்
காணப் படக்காட்சியை அழுத்துக
|