4.4 நிகழ்த்து கலைகளில் பாடுபொருள் | ||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் எம்மாதிரியான கதைகள், கதை நிகழ்வுகள் எடுத்துரைக்கப்படுகின்றன? குறிப்பிட்ட கதைகள், குறிப்பிட்ட கலைகளில் எடுத்துரைக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? இவை குறித்து இப்பகுதி விளக்குகிறது. கதை தழுவிய நிகழ்த்து கலைகளை வகைப்பாட்டில் கண்டீர்கள். நினைவிருக்கிறதா? |
||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் கதைகள் பாடலாகவோ, ஆடலுடன் கூடியதாகவோ, ஆடல், பாடல் உரையாடல்களின் வழியோ இசையுடனும் இசைக் கருவிகளுடனும் எடுத்துரைக்கப் படுகின்றன. இக்கதைகளின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தெய்வக் கதைகள், சமூகக் கதைகள் எனப் பகுக்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||
4.4.1 தெய்வக் கதைகள் | ||||||||||||||||||||||||||||||||||
வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கலைகள் நிகழ்த்தப்படுவதால் இறை உணர்வைத் தூண்டும் இதிகாச, புராண, காப்பியக் கதைகளும், சிறு தெய்வக் கதைகளுமே நிகழ்த்து கலைகளி்ல் மிகுதியாக இடம்பெறுகின்றன. குறிப்பாக இராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற இதிகாச புராணக் கதைகளே மிகுதி எனலாம். இவை நன்கு அறியப்பட்ட கதைகளாதலால் கிராம மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. |
||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
இராமாயணம், மகாபாரதக் கதைகள் முழுவதுமாகக் கலைகளில் இடம் பெறுவதில்லை. முக்கியக் கதை நிகழ்வுகள் மட்டுமே நிகழ்த்திக் காட்டப் படுகின்றன. சிறுதெய்வக் கதைகள் அந்தந்தத் தெய்வ வழிபாட்டில் தவறாது எடுத்துரைக்கப் படுகின்றன. |
||||||||||||||||||||||||||||||||||
4.4.2 சமூகக் கதைகள் | ||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில் சமூகக் கதைகள் பரவலாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று நிகழ்வுகள், மாந்தர்கள், சமூக நிகழ்வுகள், மாந்தர்கள், தலைவர்கள் இவை தொடர்பான கதைகளே சமூகக் கதைகளாக இங்குக் குறிப்பிடப் படுகின்றன. கால மாற்றத்தால் நிகழ்த்து கலைகளில் ஏற்பட்ட வளர்ச்சி என இதனைக் கூறலாம். |
||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் பாடுபொருள்கள் இதிகாச, புராணக் கதைகளாகவும் சிறுதெய்வக் கதைகளாகவுமே பெரிதும் அமைந்துள்ளன. சமூகக் கதைகளை நிகழ்த்திக் காட்டுவது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. |
||||||||||||||||||||||||||||||||||
புதிய கதைகளை உருவாக்குவதில் கலைஞர்களுக்கு உள்ள சிரமங்கள், புதிய கதைகளைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள் போன்ற காரணங்களால் மக்களால் நன்கு அறியப்பட்ட கதைகளே திரும்பத் திரும்ப நிகழ்த்து கலைகளில் இடம்பெற்று வருகின்றன. |