கணியான் கூத்து
|
கணியான்
என்னும்
இனத்தாரால்
மட்டுமே இக்கூத்து
நிகழ்த்தப்படுவதால் கணியான் கூத்து என
வழங்கப்படுகிறது. கணியான்
கூத்தில் மகுடம் என்னும் தோலிசைக்
கருவி சிறப்பிடம் பெறுவதால்
மகுடாட்டம், மகுடக்கச்சேரி
எனவும் சுட்டப்படுவதுண்டு.
|
தூத்துக்குடி, திருநெல்வேலி,
நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில்
உள்ள சுடலைமாடன் கோயில்
வழிபாடுகளில் சடங்குக் கலையாகக்
கணியான் கூத்து
நிகழ்த்தப்படுகிறது.
|
மகுடச்சத்தம்
கேட்டாலொழிய மாடன்பூசை
கொள்வானோ என்ற
வழக்காறு சுடலைமாடன் வழிபாட்டிற்கும் கணியான்
கூத்திற்கும் உள்ள
உறவை உணர்த்தும்.
|
தலைமைப்பாடகர் ஒருவர்
(அண்ணாவி என அழைக்கப்படுவார்).
மகுடம் வாசிப்போர் இருவர், ஆட்டம்
ஆடும் பெண்கள் இருவர்
(ஆண்களே பெண் வேடமிட்டு
ஆடுவர்), ஒரு பின்பாட்டுக்காரர்
என்று ஆறுபேர் கணியான்
கூத்தில் இடம்பெறுவர்.
|