மரத்தால்
அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை
இயக்கிக் காட்டி
நிகழ்த்தப்படுவது பொம்மலாட்டம் ஆகும்.
தோற்பாவைக் கூத்திலிருந்து
இது வேறுபட்டதாகும். கட்டை பொம்மைக்கூத்து,
கட்டை பொம்மை
நாடகம் என்ற பெயரிலும்
இது வழங்கப்படும். கும்பகோணம்,
மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதிகளில்
பொம்மலாட்ட சபா என்ற
பெயரில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகின்றன.
|
பொம்மைகளின்
உறுப்புகள்
கயிற்றால் தனித்தனியே
இணைக்கப்பட்டுக்
கலைஞர்களால் உரையாடலுக்கேற்ப
இயக்கிக்
காட்டப்படுகின்றன. கரகாட்டம்,
காவடியாட்டம், நெல்குத்துதல்,
கத்திச்சண்டை போடுதல்
போன்றவை பொம்மையைக் கொண்டு
செய்துகாட்டும் போது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர்.
இராமாயணக்
கதைகளே
பொம்மலாட்டத்தில் பெரிதும்
எடுத்துரைக்கப் படுகின்றன.
|