ஒரு சிற்றூரில் மண்ணாங்கட்டி என்பவன் வாழ்ந்து
வந்தான்.
அவன் பிறருக்காக வாழ வேண்டும் என்னும்
விருப்பம்
கொண்டவன். அவன் தனது தாய் இறந்த பிறகு அங்கே
வாழ
விரும்பாமல் வெளியேறுகிறான். தன்னுடன் எழுதுகோல், தாள், சில
நகைகள், காசுகள் முதலியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.
அடுத்த
நாள் அவன் அயலூர் ஒன்றை அடைந்தான். அங்கே
குளிரில் வாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்குத் தன்னிடமிருந்த
துணியைக் கொடுக்கிறான்.
இவ்வாறு
அவன் சென்ற ஒவ்வோர் ஊரிலும் வாழ்ந்தவர்களுக்குத்
தன்னிடம் இருந்த பொருட்களைக் கொடுக்கிறான்.
ஓர்
ஊரில் பண்ணையார்கள் நன்கு உண்டு உறங்குவதைக்
கண்டான். அங்கே உள்ள ஏழைகள் பசியால் வாடுவதையும்
கண்டான். வேலை இல்லாததால் ஏழைகள் துன்பப்படுவதை அறிந்த
அவன் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்குத்
திட்டமிட்டுச்
செயல்படுகிறான்.
|