|
தொல்காப்பியமும்
நன்னூலும் ஓர்எழுத்து ஒருமொழி
குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துகளில் ஒற்றுமைகளும்
வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
ஒற்றுமைகள்
(1)
|
தொல்காப்பியமும்,
நன்னூலும் ஓர்எழுத்தே
ஒருமொழியாக வரும் என்பதைக் குறிப்பிடுகின்றன. |
(2)
|
பெரும்பாலும் நெடில்எழுத்துகளே
ஓர்எழுத்து
ஒருமொழிகளாக வரும் என்பதை இருநூல்களும்
குறிப்பிடுகின்றன. |
வேற்றுமைகள்
(1)
|
தொல்காப்பியம்
ஓர்எழுத்து ஒருமொழிகளாக
உயிர்எழுத்துகளை மட்டுமே தெரிவிக்கிறது.
நன்னூல் உயிர்எழுத்துகளோடு
உயிர்மெய்
எழுத்துகளிலும் ஓர்எழுத்து ஒருமொழிகள் வரும்
என்று கூறுகின்றது. |
(2)
|
தொல்காப்பியம்
உயிர் நெடில்கள் ஏழையும்
ஓர்எழுத்து ஒருமொழி என்று கூற, நன்னூல்
‘ஒள’வை நீக்கிவிட்டு உயிர்நெடில்கள் ஆறு
எழுத்துகள் மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழிகள்
என்று தெரிவிக்கின்றது. |
(3)
|
தொல்காப்பியம்
குற்றெழுத்துகள் ஓர்எழுத்து
ஒருமொழியாக வருவது இல்லை என்று கூற.
நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில்
நொ, து ஆகிய
இரு குற்றெழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக
வரும் என்று விளக்குகின்றது. |
|