3.5 தொகுப்புரை |
நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வந்த சிறுபாணன் பரிசு பெற விரும்பும் சிறுபாணனிடம் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பை வியந்து கூறுகிறான். அவனது கொடைத்திறம் சேர, சோழ, பாண்டியர்களின் கொடையைக் காட்டிலும் மேலானது; கடையெழு வள்ளல்களின் அருங்கொடையை விட உயர்ந்தது என்று மகிழ்ந்து கூறுகிறான். |
"உன்னைப் போல் நானும் வறுமையில் வாடினேன்; செய்வது தெரியாமல் விழித்தேன். நல்லியக்கோடனிடம் சென்று பரிசு பெற்றமையால் என் வறுமைத் துன்பம் முற்றிலும் நீங்கியது. எனவே, நீயும் அவ்வள்ளலிடம் சென்று பரிசு பெற்று, துயர் நீங்குவாயாக" என்று பரிசு பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனை வழிப்படுத்துகிறான். |
1. |
சோழ நாடு எதனை உடைத்து? | விடை |
2. |
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக. | விடை |
3. |
முல்லைக்குத் தேர் ஈந்தவன் யார்? | விடை |
4. |
மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் யார்? | விடை |
5. |
நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் யார்? யாருக்குக் கொடுத்தான்? | விடை |
6. |
ஓரியின் குதிரை எவ்வாறு அழைக்கப்பட்டது? | விடை |