5.5 தொகுப்புரை

     களவியல் பற்றிய இரண்டாம் பகுப்பான இப்பாடத் தொகுப்பின் மூலம் பின்வரும் செய்திகளை அறிந்து கொண்டோம்.

  1. தலைவன் விருப்பத்தைப் பாங்கி உடன்படுதல்; அதன்
    மூன்று நிலைகள்.

  2. பாங்கியின் மூலம் நிகழும் தலைவன் தலைவியரின்
    கூட்டத்தின் வகைப்பாடுகள்.

  3. மடலேறுதல் பற்றிய விளக்கம்.

  4. தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் சந்தித்துக்
    கொள்ளும் குறியிடம் - குறி இடையீடு பற்றிய
    விளக்கங்கள்.

  5. அல்லகுறிப்படுதல் - தலைவன் இரவில் வரும் வழியின்
    அருமைப் பாடு முதலான சிறப்புச் செய்திகள்.

மேற்கண்ட செய்திகளை அறிவதன் மூலம் தலைமக்கள் திறமையுடன் மேற்கொண்ட     களவு வாழ்க்கையின் அருமைப்பாட்டை உணர முடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள்-II
1. பகற்குறி, இரவுக்குறி - விளக்குக.

விடை

2. குறி இடையீடு என்றால் என்ன?

விடை

3. பகற்குறி இடையீட்டு வகைகளை எழுதுக.

விடை

4. அல்லகுறி எனப்படும் இரவுக்குறி இடையீட்டை
விளக்குக.

விடை