பகற்குறி இடையீடு மூன்று வகைப்படும்.
விலக்கல் : தலைவனும் தலைவியும் பகற்குறிக்குரிய
இடத்திற்கு வருவதைத் தோழி விலக்குதல் (தடுத்தல்)
விலக்கல் எனப்படும்.
சேறல் : தலைமகளைக் குறிப்பிட்ட இடத்தை விட்டு
அழைத்துக் கொண்டு தோழி வேறு இடம் சென்று சேர்வது
சேறல் எனப்படும்.
கலக்கம் : தோழியால் குறி விலக்கித் தலைவன் தலைவியர்
பிரிந்த பிறகு இருவரும் மனம் கலங்குதல் கலக்கம்
எனப்படும்.
|