தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.

கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.

(1) செவிலி புலம்பல் :
தலைவி காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித் தாய் புலம்புதல்.
(2) நற்றாய் புலம்பல்   :
தன் புதல்வி காதலனுடன் உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து கொண்ட நற்றாய் புலம்புதல்.
3) கவர் மனை மருட்சி :
நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல்.
(4)

கண்டோர் இரக்கம்

:

தலைவியின் தாயும் தோழியரும் அவளது உடன்போக்கினை அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை இரங்கிக் கூறுதல்.

(5) செவிலி பின்தேடிச் சேறல் :
உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல்.

முன்