(1)
தலைவியின் பிரிவைத் தாங்காத நற்றாயைத் தேற்றுதல். |
(2)
செல்லும் வழியில் மூன்று தண்டுகளைக் கையில் கொண்ட
அந்தணரை (முக்கோல் பகவர்)
வினவுதல். |
(3)
அந்தணர் செவிலியிடம் ‘உடன்போக்கு
உலக இயல்புதான்’
என்று காரணம் கூறி விளக்குதல். |
(4)
செவிலி, பாலை நிலத்தில் செல்லும்
போது
இடைவெளியில்
சந்தித்த ஒரு பெண்ணிடம் புலம்பிக் கூறுதல். |
(5)
செவிலி இடைவழியில்
கண்ட குரா என்னும்
மரத்துடன்
புலம்பிப் பேசுதல். |
(6)
தான் செல்லும் வழியில்
பாதச் சுவடுகளைக்
கண்டு அவை
தலைவியின் பாதச் சுவடுகளாகுமோ என்று
வருந்திப் பேசுதல். |
(7) செவிலி
போகும் வழியில் எதிர்ப்படும்
தலைமக்களைப்
பார்த்துத் தன் மகள் சென்ற
விவரம் கேட்டல். |
(8)
எதிரில்
வந்தோர் செவிலியின் புலம்புதலைக்
கேட்டு
அவளுக்கு ஆறுதலான சில
வார்த்தைகளைக் கூறுதல். |
(9)
செவிலி, நெடுந்தூரம்
நடந்தும் தன் புதல்வியைக்
காணாமையால் துன்பம் மிகுந்து வருந்திக் கூறுதல்.
|