தன் மதிப்பீடு : விடைகள் - II | |
3. |
வரைதலின் மூன்று நிலைப்பாடுகள் யாவை? களவியல் கற்பியலாக மாறுவதற்கு இடைப்பட்ட காரண காரியமாக அமைவது வரைவு என்னும் திருமண நிகழ்வே ஆகும். இவ்வரைவு (1) உடன்போக்காகச் சென்று வரைந்து கொள்ளுதல். (2) உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தன் மனையில் வரைதல். (3) உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தலைவியின் மனையில் வரைதல். என மூன்று நிலைப்பாடுகளை உடையது. |