2.7 தொகுப்புரை

இப்பாடத்தில் பின் வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்:

(1) களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு என்பதைப் பற்றிய விளக்கம்.

(2) உடன்போக்கு நிகழ்ந்த பிறகு செவிலி புலம்புதல் முதலாக நிகழும் கவ்வைகள்.

(3) தலைவனும் தலைவியும் மீண்டு வருதல் பற்றிய செய்திகளின் தொகுப்பாகிய மீட்சி என்பது.

(4) உடன்போய் மீண்டு வந்த தலைவன் தலைவியை மணந்து கொள்வதில் அமையும் வகைப்பாடுகள்.

(5) தலைவனும் தலைவியும் மேற்கொண்ட உடன்போக்கில் ஏற்பட்ட இடைத்தடையாகிய இடையீடு பற்றிய விளக்கம்.

(6) தலைவன் தன் ஊரிலும் தன் மனையிலும் வரைந்து கொள்ளாத போது நிகழ்வது உலகியல் மாறாத பொதுவான வரைதல் ஆகும். அது பற்றிய விளக்கம்.

 

தன் மதிப்பீடு : வினாக்கள்- II

1.

மீட்சி - விளக்குக.

விடை

2.

மீட்சியின் நான்கு வகைகளை விளக்குக.

விடை

3.

வரைதலின் மூன்று நிலைப்பாடுகள் யாவை?

விடை

4.

உடன்போக்கு இடையீடு எத்தனை உட்பிரிவுகளை உடையது? அவை யாவை?

விடை