தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

கற்பின் இலக்கணத்தை விவரிக்க.

கற்பு என்பது, தலைமக்கள் வரைவு (திருமணம்) மேற்கொண்டு நடத்தும் இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். களவு என்னும் மறைமுகக் காதல் வாழ்க்கையை மாற்றி, அறநெறியில் ஊரறிய மணம் செய்து கொண்டு உலகியலுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை ; தலைமக்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை நெறிகளைக் கற்பித்துக்கொண்டு, அவற்றைப் பின்பற்றி வாழும் முறையான இல்லறம். பெற்றோர், செவிலித்தாய், சான்றோர் முதலானவர்கள் இல்லறத்திற்குரிய நன்னெறிகளைக் கற்பிப்பதால் கற்பு என்றும் விளக்கம் கூறுவர்.

முன்