5.9 தொகுப்புரை

ஒழிபியலின் பிற்பகுதிச் செய்திகளை உள்ளடக்கி அமைந்த இப்பாடத்தினால் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

அகப்பாட்டின் பொருள், உவமை, இறைச்சி என்னும் இரண்டு நிலைகளில் அமைகின்றது.

உள்ளுறை, வெளிப்படை என்னும் இரண்டு கூறுபாடுகளை உடையது உவமை.

உள்ளுறை உவமையைப் போலவே இறைச்சியும் கருப்பொருள் அடிப்படையில் பிறந்தாலும் நுட்ப வேறுபாடுடையது.

கைக்கிளையும், பெருந்திணையும் அகப்பொருளுக்கு உரியவை, அகப்பொருளுக்குப் புறத்தே அமைபவை என்னும் இரண்டு நிலைகளை உடையன.

அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இருநிலைப் பட்டவனாக அமைகிறான்.

அகப்பாடல்களில் முதல், கரு, உரி முதலான பொருள்கள் மயங்குவது வழு அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

அகப்புறக் கைக்கிளை - விளக்கம் தருக.

விடை
2.

அகப்பொருட் பெருந்திணையின் செய்திப்பிரிவுகள் யாவை?

விடை
3.

விடைதழாஅல், குற்றிசை, சுரநடை, தபுதாரநிலை இவற்றை விளக்குக.

விடை
4.

தலைமக்களுக்குக் கூறப்படும் பெயர்கள் யாவை? விளக்கம் தருக.

விடை
5.

திணை மயக்கம் என்பதைச் சான்றுடன் விளக்குக.

விடை