3.8 தொகுப்புரை    

    காப்பியம் தொடர்நிலை, தொடர்நடை, கதை, கதைப்பாட்டு, சரிதம் எனப் பிறபெயர்களால் சுட்டப் பெறுவதும் உண்டு.

    தண்டியலங்காரத்தில் காப்பிய இலக்கணம் வரையறுத்து உரைக்கப்பட்டுள்ளது. காப்பிய முகப்பு, வருணனை, கதை நிகழ்ச்சிகள், காப்பியச் சுவை, காப்பியப்பயன் இன்னவாறு அமைய வேண்டும் என அது கூறுகின்றது.

    நாற்பொருளும் கொண்டிருப்பது பெருங்காப்பியம் ; அவற்றுள் ஒருசில குறைந்து வருவது காப்பியம் எனக் காப்பியம் இருவகைப்படும்.

    சமய அடிப்படையிலும் தலபுராண அடிப்படையிலும் எண்ணற்ற காப்பியங்கள் தமிழில் தோன்றியுள்ளன.

    தமிழில் முதலில் தோன்றியன, பிறமொழியிலிருந்து தழுவியும் மொழி பெயர்த்தும் எழுதப்பட்டன என இருவகையில் காப்பியங்கள் உள்ளன.

    இவற்றை இப்பாடத்தின் வழி நன்கு அறிந்து கொண்டோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
காப்பியங்களில்    இடம்பெறும் அகப்பொருள் நிகழ்ச்சிகள் யாவை? விடை
2.
புறப்பொருள் நிகழ்ச்சிகளாகக் காப்பியங்களில் இடம் பெறுவன யாவை? விடை
3.
தமிழிலேயே தோன்றிய காப்பியங்கள் இரண்டனைக் கூறுக. விடை
4. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த காப்பியங்கள் இரண்டனைக் கூறுக. விடை

5.

சைவ சமயக் காப்பியங்கள் இரண்டனைக் கூறுக. விடை