4.3 ஆர்வமொழி அணி | |||||||||||||||||||||||||
இதுவும் ஒருவகையால் சொல் பற்றிய அணியே ஆகும். உள்ளத்தில் உள்ள ஆர்வத்தைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்த அணி ஆகும். | |||||||||||||||||||||||||
4.3.1 ஆர்வமொழி அணியின் இலக்கணம் | |||||||||||||||||||||||||
ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. உள்ளத்திலே தோன்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் சொற்கள் அதிகம் தோன்றும்படி சொல்லுவது ஆர்வமொழி அணி எனப்படும். |
|||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
எடுத்துக்காட்டு:
|
|||||||||||||||||||||||||
(புல்ல - தழுவ; புடைபெயரா = பக்கங்களில் நீளா; வனைதாராய் = அழகிய மாலை அணிந்தவனே; மாறு - கைம்மாறு.) |
|||||||||||||||||||||||||
பாடலின் பொருள்: அழகிய மாலையை அணிந்தவனே! உனக்கு முன்னே நின்று மறுமொழி கூறுவதற்கு முயன்றால் எங்களுடைய சொற்கள் தடுமாறிச் சோர்வுபடுகின்றன; உன்னுடைய இரண்டு தோள்களைத் தழுவ முயன்றால் எங்களுடைய இரண்டு தோள்களும் பக்கங்களில் நீண்டு வளர்ந்தவை அல்ல; மெல்ல உன்னுடைய புகழை நினைப்போமாயின் எங்களுடைய உள்ளத்தில் அதற்கு இடம் போதாது; நீ எம் இருப்பிடம் நோக்கி வந்த உன்னுடைய இப்பெருமைக்கு யாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? • அணிப்பொருத்தம் இப்பாடலில், தலைவி தலைவன்பால் கொண்டுள்ள அன்பு மிகுதியை 'மொழிதளர்ந்து சோரும், தோள் புடைபெயரா, நெஞ்சு இடம்போதாது' என மிகுதியான ஆர்வமொழிகள் கொண்டு வெளிப்படுத்துவதால் இது ஆர்வமொழி அணி ஆயிற்று.
|