5.3 இடைக்காலத்தில் துணைவினைகள்

     இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற புதிய புதிய துணைவினைகள் வழக்கில் வரலாயின. சங்க காலத்தில் வழங்கியனவாகக்     கூறப்பட்ட     துணைவினைகள் பலவும் இடைக்காலத்தில் வழங்கின.     இடைக்காலத்தில்     புதிய துணைவினைகளின் ஆட்சியைக் கீழ்க்கண்ட சான்றுகளால் அறியலாம்.

சான்று :

மாட்டு

நம்மை மறந்தாரை நாமறக்க
மாட்டேமால்
             (சிலம்பு, 7:32-3)

(மறக்க மாட்டேம் = மறக்க மாட்டோம் ;ஆல் = சை)

ஒழி


. . . .அவன்முன் அயர்ந்து
ஒழிவாய் அலை
             (மணிமேகலை, 21:112)

(அயர்ந்து - மறந்து ;அயர்ந்து ஒழிவாய் = மறந்து ஒழிவாய்).

வை


ஆறைம் பாட்டினுள் அறிய
வைத்தனன் என்
             (மணிமேகலை, பதிகம்.95)

(அறிய வைத்தனன் =
அறியச் செய்தான்)

ஆக்கு


அந்தரந் திரியவும்
ஆக்குமிவ் வருந்திறன்
             (மணிமேகலை, 10;80)

(திரியவும் ஆக்கும்
=
திரியச் செய்யும்)

கூடு

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
                 (சிலம்பு, 10;83)

(குடங்கையின் = வளைந்த கையால் ; நொண்டு = முகந்து கொள்ளவும் கூடும் = உட்கொள்ளவும் தகும்).

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
  துணைவினை என்றால் என்ன?
2.
  கூட்டுவினையின் அமைப்பு யாது? ஒரு சான்று தருக.
3.
  சங்க காலத்தில் வழங்கிய துணைவினைகள் யாவை?
4.
சங்க காலத்தில் தொழிற்பெயருடன் சேர்ந்துவந்த
துணைவினைகள் யாவை?
5.
இடைக்காலத்தில் வழங்கிய புதிய துணைவினைகள்
யாவை?