4.2
பெண்ணியம் : பல கோணங்கள்
பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே
நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் -
கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே
பார்க்கலாம்.
4.2.1 மிதவாதப் பெண்ணியம்
இது பெண்ணின் சிறப்புக்களைக்
கூறுவதிலேயே அதிகம்
கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண்
- பெண்
எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில்
அதற்காகப்
போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள்,
சட்டமன்றங்கள்
முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம்
கொள்கிறது.
4.2.2 போராட்ட குணம் மிக்க பெண்ணியம்
பெண் உரிமைகளைப்
போராடித்தான் பெற முடியும்-
பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச்
சொத்துரிமை போன்றவற்றிற்காக இது
போராடிப் பெற்றும்
தந்துள்ளது.
4.2.3 தீவிரவாதப் பெண்ணியம்
நவீனப் பெண்ணியம் என்று
சொல்லுகின்ற இது, ‘அரசியல்
அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும்
வழங்கப்பட்டுள்ள
ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில்
அவைக்குதவாதது’ என்று
குற்றம் காட்டுகிறது. குடும்பம்,
பாலியல் உறவு முதலியவை
பெண்ணை அடிமைப்
படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து
பெண் விடுதலையாகி,
வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.
4.2.4 புரட்சிகரப்
பெண்ணியம்
பாலியல் உரிமை (sexual
right), கட்டற்ற அல்லது
கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச்
சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்-
முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.
4.2.5
சமதர்மப் பெண்ணியம்
குடும்பத்திற்குள்ளும் அதற்கு
வெளியேயும் பெண்,
பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும்.
அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று
சொல்கிறது.
ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம
அமைப்பிலேயே பெண்ணும்
நிரந்தரமாக சமத்துவநிலை
பெறுகிறாள் என்று இது கூறுகிறது.
இந்தியாவில்/
தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே
பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
பெண்ணிலை வாதம்
என்றால் என்ன? |
|
2. |
தமிழகத்தில் பெண்விடுதலை
பற்றி அழுத்தமாகவும்
புதுமைக் கண்ணோட்டத்துடனும் எழுதிய இருவர்
யார்? |
|
3. |
பெண்ணின்
பெருமை என்ற நூலைத் தந்தவர்
யார்? |
|
4. |
இந்தியாவில்/
தமிழகத்தில் பெரும்பான்மையாகக்
காணப்படும் பெண்ணியச் சிந்தனை எது? |
|
|