இந்தப்
பாடம் பல துறைகளிலும் வல்லவராகிய அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளின் பல்வேறு
சிறப்பியல்புகளை விளக்கிக் காட்டுகிறது. 1934 முதல் 1966 வரையுள்ள
காலத்தில் அண்ணாவின் சமூகச் சிந்தனையோட்டம் அவரது புனைகதைகளில் எவ்வாறு
பதிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. சாதி, மத, பொருளாதார, பால் வேறுபாடுகளால்
ஒடுக்கப்படும் மக்களின் உயர்வுக்காகவே அண்ணா எழுதினார் என்பதைப் புலப்படுத்துகிறது.
|