தன்மதிப்பீடு : விடைகள் - I

1) கவிதைக்குத் தேசிகவிநாயகம் கூறிய விளக்கம் யாது?

கவிமணி தேசிகவிநாயகம்,

“உள்ளத்துள்ளது கவிதை; இன்ப
உணர்வெடுப்பது கவிதை;
தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை
தெரிந்துரைப்பது கவிதை”

எனக் கவிதைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.