தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
2) |
நெருக்கடிக் கால அதிகாரம் உடைய இந்திய இதழியல் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? விளக்குக. |
1931ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி இதழ்களும் அச்சகங்களும் பத்தாயிரம் ரூபாய் பிணையத்தொகை கட்டவேண்டும். இத்தொகையை மாநில அரசுகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். இச்சட்டம் காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது. |