6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை செய்திக் களங்களில் இருந்து பெறப்படும் செய்திகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை அறிந்திருப்பீர்கள்.

மேலும் இப்பாடத்தில் என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

செய்தியின் கட்டமைப்பாகிய தலைப்பு, முகப்பு, உடற்பகுதி ஆகியன பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
செய்தியைச் செம்மையாக்கம் செய்கிற பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும் விளக்கமாக அறிந்து கொண்டோம்.
செய்திகளை எழுதும் பொழுது கவனிக்க வேண்டிய விதிகளையும் விவரமாக அறிய முடிந்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

செய்திகளை எழுதும் பொழுது பின்பற்ற வேண்டியவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுக.

விடை
2.

செம்மையாக்கம் என்றால் என்ன?

விடை