இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க. அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என்றோளே.
(குறுந்தொகை,83)
விளக்கம்:
இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான
கருத்து: இனிமை
தரும் களைகளை உள்ளே கொண்டிருந்தும்,
வெளியே இன்னாத
முட்களையுடையனவாய்க் காணப்படும்
பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன்
வருவான்
என்று செவிலி கூறினாள் என்பது.
தோழி உணர்த்த விரும்பும் கருத்து:
உள்ளத்தில், வரைந்து
(மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி
இன்பம் அடையும் எண்ணம் இருந்தும்,
புறத்தே இன்னல்
தரும் களவிலே காதலுடையான்போல்
காணப்பட்டான்
தலைவன் என்பது, தோழிகூற்றின்
புறத்தே பிறிதொரு
பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும்
பொருள் அமைப்பு உள்ளது.
|