பழந்தமிழ்நாட்டில் சிவ வழிபாடு
என்ற இப்பாடத்தில்
சங்க காலம் தொடங்கி திருமுறைகளின்
காலம் வரை
காணப்படுகின்ற சிவ வழிபாட்டுச் செய்திகள் திரட்டித்
தரப்
பெற்றுள்ளன. வழிபாடுகள் பலவகையில் அமைந்துள்ளன
என்பதும் கால நியதிப்படி சுட்டிக் காட்டப்
பெற்றுள்ளது.
திருமுறைகளின் காலமான 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு
தற்காலம் வரை சிவ வழிபாடு பண்டைய மரபுப்படி நடந்து
வருகிறது என்பதை அறியலாம்.
சிவ வழிபாடு இயற்கை வழிபாடுகளில்
தொடங்கி, உருவ,
அருவ, அருவுருவ வழிபாடாக வளர்ந்து, அடியார் வழிபாடு
என்ற நிலையில் மனித நேயமாக மிளிர்வதை
இப்பாட
வழிகாட்டியால் அறிந்து கொள்ளலாம்.
|