![]() |
தாத்தா வைத்த தென்னையுமே | ![]() |
| தலையால் இளநீர் தருகிறது | ||
| பாட்டி வைத்த கொய்யாவும் | ||
| பழங்கள் நிறைய கொடுக்கிறது | ||
![]() |
அப்பா வைத்த மாஞ்செடியோ | ![]() |
| அல்வா போலப் பழம்தருது | ||
| அம்மா வைத்த முருங்கையுமே | ||
| அளவில் லாமல் காய்க்கிறது | ||
![]() |
அண்ணன் வைத்த மாதுளையோ | ![]() |
| கிண்ணம் போலப் பழுக்கிறது | ||
| சின்னஞ் சிறுவன் நானும் ஒரு | ||
| செடியை நட்டு வளர்ப்பேனே! |
-அழ.வள்ளியப்பா