![]() |
தாத்தா வைத்த தென்னையுமே | ![]() |
தலையால் இளநீர் தருகிறது | ||
பாட்டி வைத்த கொய்யாவும் | ||
பழங்கள் நிறைய கொடுக்கிறது | ||
![]() |
அப்பா வைத்த மாஞ்செடியோ | ![]() |
அல்வா போலப் பழம்தருது | ||
அம்மா வைத்த முருங்கையுமே | ||
அளவில் லாமல் காய்க்கிறது | ||
![]() |
அண்ணன் வைத்த மாதுளையோ | ![]() |
கிண்ணம் போலப் பழுக்கிறது | ||
சின்னஞ் சிறுவன் நானும் ஒரு | ||
செடியை நட்டு வளர்ப்பேனே! |
-அழ.வள்ளியப்பா