இரண்டாம் பருவம்
அகரம்
21.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 21
தமிழர் திருநாள்
தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர் தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப்பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
- பாரதிதாசன்
பொருள் அறிவோம்
தைம்மதி
-
தை மாதம்
செம்மை
-
சிறப்பு
ஏலம்
-
ஏலக்காய்
பண்ணிலே
-
பக்குவமாக
எண்ணிலே
-
மனத்திலே