மலர் இன்முகம் காட்டிடுமே - அதனால்
இன்பமும் ஊட்டிடுமே.
நன்மணம் வீசிடுமே - சுற்றி
நான்கு திசைகளுமே.
வண்டுகள் தேன்விரும்பி - நாடி
வந்திடும் மொய்த்திடவே.
பாசமாய் மக்களுமே - இதனைப்
பறித்துச் சூடுவரே.
மலர் என உள்ளம் - நமக்கு
மலர வேண்டுமடி.
பலரும் போற்றிடவே - உலகில்
பண்புடன் வாழ்வோமடி.
- அழ.வள்ளியப்பா