| ஆமை : | தம்பி, யார் நீ ? |
| சிறுவன் : | என் பெயர் முகிலன். |
| ஆமை : | ஏன் வருத்தமாக இருக்கிறாய் ? |
| சிறுவன் : | நான் என் நண்பனிடம் கடுமையாகப் பேசிவிட்டேன். |
| ஆமை : | ஏன் அப்படிப் பேசினாய்? |
| சிறுவன் : | அவன் எப்போதும் என்னிடம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறான். அதனால்தான் அப்படிப் பேசினேன். |
| ஆமை : | அவ்வாறு செய்யக்கூடாது. |
| சிறுவன் : | தெரியும். ஆனால் என்னால் சினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையே. நான் என்ன செய்யட்டும் ? |
| ஆமை : | எனக்குத் துன்பம் வரும்போது, எனது நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்பையும் ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வேன். |
| சிறுவன் : | ஓ ! அப்படியா ! |
| ஆமை : | ஆமாம். நீயும் உன் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், யாருக்கும் தீங்கு நேராது. நீயும் மனவருத்தம் இன்றி இருக்கலாம். |
| சிறுவன் : | சரி, இனி நானும் அப்படியே செய்கிறேன். நன்றி, நான் வீட்டிற்குப் போகிறேன். |
| ஆமை : | உம் .. உம் .. கவனமாகச் செல். |