இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

(குறள் 391)

- திருவள்ளுவர்

(கசடற = குற்றம் இல்லாமல்)

பொருள்

கற்க வேண்டியவற்றைப் பிழையின்றிக் கற்கவேண்டும் அவ்வாறு கற்ற பிறகு, அதன்படி வாழவேண்டும்.